பள்ளி குழந்தைகளுக்கு சாக்லெட், குடிசை வீட்டிற்குள் நுழைந்து போஸ் என சசிகலா இன்று பட்டையை கிளப்பினார். ஒபிஎஸ் அணி காலை முதல் மிகுந்த அமைதியாக இருந்தது. தற்போது ஒரு எம்எல்ஏ, ஒரு எம்பியையும் தங்கள் பக்கம் வரவழைத்து சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிவிட்டனர்.
சசிகலா கூவத்தூர் சென்று அங்கேயே தங்கி இருக்க போவதாக அறிவித்தார். அங்கு தங்க காரணம் தீர்ப்பு வெளி வரும் போது தனக்கு பாதகமாக வந்தால் தினகரனையோ அல்லது கட்சியில் யாரையோ உடனடியாக பதவி ஏற்க செய்யும் வகையில் அங்கேயே சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவரை தேர்தெடுக்க வசதியாக தான் அவர் தங்கியுள்ளார்.
குறிப்பு: சசிகலா தற்போது அதிமுக ஆட்சி அமையும் என்று தான் கூறிவருகிறாரே தவிர தான் முதல்வராவேன் என சொல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending