தி. நகரில் அலுவலகம் திறந்தார் தீபா

Published:

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தமிழகத்தில் அதிமுக துண்டு துண்டாக சிதற தொடங்கியுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஒபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் ஜெ.தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இந் நிலையில் தீபா இன்று காலை தனது அமைப்பிற்கான அலுவலகத்தை தி.நகரில் துவங்கினார்.

அதன் பின் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தீபா இன்று மாலை தனது அமைப்பிற்கான பெயர் மற்றும் கொடியை அறிவிப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் தீபக்கின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறார்கள் என்று மட்டும் கூறினார். மாலை விரிவாக பேசுவதாக தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img