செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அழகுசமுத்திரம் கிராமத்தில், பெருமாள்மலை குன்றில் உள்ள கிறிஸ்துவர்களின்
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து 5 வது நாளாக நடைபெறுகிறது.
செங்கல்பட்டு அடுத்த, அழகுசமுத்திரம் கிராமத்தில்,
மலைக்குன்று உள்ளது. இங்கு, சோகண்டி கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், மலையை
ஆக்கிரமித்து, சிலுவைகள் மற்றும் சிலைகளை வைத்தனர். அந்த ஆக்கிரமிப்புகளை
அகற்றக் கோரி, கிராம பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம், மலையிலிருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றினர்.
அதில்,
ஒரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினர் அகற்றாமல் விட்டனர்.
அவற்றை அகற்றக் கோரி, கிராம மக்கள், அதே பகுதியில், உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு, ஆதரவாக, பா.ஜ., –
ம.தி.மு.க., கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று வருகின்றனர். செங்கல்பட்டு தாலுகா
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5வது நாளாகத் தொடர்கிறது. இந்தப் பகுதியில் கிறிஸ்துவர்கள் மலைகளில் சிலுவைகளை நட்டு, சர்ச்சுகளைக் கட்டி வருகின்றனர்.
ஏற்கெனவே, அச்சிறுப்பாக்கம் மலை இதே வகையில் கிறிஸ்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பாரம்பரியமாக வழிபடப்படும் கோயில் வழிபாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப் பட்டு வருவதால், எந்நேரமும் மத மோதல்கள் ஏற்படக் கூடிய அபாயம் இருந்துவருவது குறிப்பிடத் தக்கது.