ஆர்.கே.நகர் தொகுதி பாஜக வேட்பாளராக கங்கை அமரன் பெயர் அறிவிப்பு

Published:


ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கபட்டுள்ளார்.

கடந்த 2016–ம்
ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் (டாக்டர்
ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்று
முதல்–அமைச்சர் ஆனார்.
இந்தநிலையில்
உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந்தேதி அவர் காலமானார். அவரது
மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12–ந்தேதி
இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.
இந்த
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 16–ந்தேதி முதல் 23–ந்தேதி
வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆர்.கே.நகர்
தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று
வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 
அ.தி.மு.க.
சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட
உள்ளார். தி.மு.க. சார்பில் என்.மருதுகணேஷ் போட்டியிட இருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் பாஜக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிகாராபூர்வ அறிவிப்பை  பாஜக
தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா டெல்லியில் அறிவித்தார். இசையமைப்பாளர்
இளையாராஜாவின் சகோதரர் கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img