கிண்டல் செய்யும் ஆண்கள் கையை வெட்டுங்கள்: ஏடிஎஸ்பி வெள்ளதுரை பேச்சால் பரபரப்பு

Published:

முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தனியார் கல்லூரி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராமநாதபுரம் ஏடிஎஸ்பி வெள்ளதுரை பேசுகையில், ‘‘பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கத்தியை வைத்து கொள்ளுங்கள். கிண்டல் செய்து தவறான முயற்சியில் ஈடுபடும் ஆண்களை கத்தியால் முதலில் கையில் வெட்டுங்கள். அதற்கு போலீஸ் உறுதுணையாக இருக்கும். அதேபோல் சமத்துவ பொங்கல், சமத்துவபுரம் என்பது எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை. தற்போது நாட்டில் அறிவியல் வளர்ச்சி எந்த அளவுக்கு உண்டோ, அந்த அளவுக்கு அழிவும் உண்டு
*மாணவிகள் மனம் தளராமல் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். படிப்பில் இருக்கும் கவனத்தை விட பொது அறிவு வளர்ச்சியில் ஏற்படுத்தி,  அரசு பணிகளில் ஈடுபட முயற்சி செய்ய வேண்டும். இதே மண்ணில் தான் வேலுநாச்சியாரும், சூசைபாமா போன்றவர்களும் பிறந்தவர்கள். படித்த மாணவிகள் அரசியல்வாதியாக மட்டும் வர ஆசைப்படாதீர்கள்,’’ என்றார். ஏடிஎஸ்பி ஒருவரே கத்தியால் வெட்டுங்கள் என கல்லூரி விழாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது*
ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img