மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு! நுகர்வோர் மகிழ்ச்சி!

Published:

electric meter
electric meter

மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு!
நுகர்வோர்கள் மீண்டும் ஹேப்பி!!

பொதுமுடக்கம் காரணமாக, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மார்ச் 31 ஆம் தேதி வரை பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணத்தை செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மார்ச் 25 தேதி முதல் இதுநாள் வரை, நுகர்வோர் உபயோகித்துள்ள மின்சாரத்துக்கான கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் நுகர்வோர் மின்கட்டணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் ஜூலை 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அவகாசம் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் மின் வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்ற வழக்கமான நடைமுறையில்தான் மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. தங்களது மின்கட்டணம் தொடர்பாக நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதுகுறித்து அவர்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img