சென்னை : 4 நாட்கள் வங்கிகள் இயங்காது… இயங்காது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. ஆயுத
பூஜை, தசரா பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு
தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
வரும் 29ம் தேதி முதல் அக்.,2 வரை வங்கிகள் இயங்காது. அதனால் வாடிக்கையாளர்கள்
28ம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடித்து கொள்வது நல்லது.
ஏற்கனவே, ஆக., 12 முதல், 15 வரை, நான்கு நாட்கள் வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை
விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.