ஜெயலலிதாவை விட அண்ணன் எடப்பாடிதான் பெஸ்ட்: செல்லூர் ராஜூ பகீர்!

கரூர்:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை விட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகமாக மக்களுக்கு தந்து வருகின்றார் – எடப்பாடி பழனிச்சாமியின் திட்டத்தை பார்த்தால் மு.க.ஸ்டாலின் பக்கத்தில் கூட நிற்க முடியாது – கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கரூரில் சர்ச்சை பேட்டி அளித்துள்ளார்.

தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் ஒரு நல்ல அரசியல்வாதியும், இரும்பு பெண்மணியாக இருந்தவர் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆவார். இந்நிலையில் அவரது இறப்பிற்கு பின்பு, அ.தி.மு.க என்பது ஒரு பிளவு பட்ட இயக்காக மாறியதோடு, அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு அளவிற்கு அதிகமாகவும் இருந்து வருவதை நாம், பார்க்க முடிகின்றது. எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அ.தி.மு.க பொறுத்தவரை அம்மா தான் என்று கூறி ஆரம்பித்து பின்பு முடிப்பார்கள். ஆனால் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு படி மேல் சென்று, அறிமுகப்படுத்தியது அம்மா தான், அதை அதிகப்படுத்தியது அண்ணன் எடப்பாடி அரசு தான் என்றார்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை தனியார் மஹாலில் கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்த போது, முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 55 திட்டங்களில் 18 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில், தற்போது ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதாகவும், குறிப்பாக தாலிக்கு தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராம் என்பதை முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே அறிவித்தும், செயல்படுத்தினார்.

ஆனால் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதுவும் 4 கிராம் அறிவித்தார். தற்போது, 8 கிராமாக அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அரசு தான் என்றும், அதே போல், கர்ப்பினி பெண்களுக்கு 12 ஆயிரம் நலத்திட்ட உதவியிலிருந்து 18 ஆயிரமாக தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தான் வழங்கி வருவதாகவும் அதுவும் எடப்பாடி பழனிச்சாமி தான், என்றும், மகளிர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதும் தற்போது தான் என்று பேட்டியளித்ததுடன் அப்போதே, போக்குவரத்து துறையை பார்த்து ஏன்ப்பா ? செயல்படுத்திகிட்டு இருக்கின்றதா ? என்றும் கேட்டார். அதே போல, குடிமராமத்துப்பணி 1019 ஐ நிறைவேற்றி இருக்கின்றோம் என்றார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதே போல, 2065 ஏரி குளங்களை மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சியால் தான் சீரமைக்கப்பட்டுள்ளது என்றார். அதன் பிறகு இந்திய அளவில் வறட்சி தமிழகத்தை வாட்டியது, அப்படி இருந்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் வறட்சி நிவாரண நிதியையும் மத்திய அரசிடம் கேட்டு வாங்கியதாக கூறினார். மேலும் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டத்தை எல்லாம் பார்த்தால் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கள் பக்கத்திலே நிற்க முடியாது, மேலும் சட்டமன்றத்தில் எங்களிடம் கேட்க மாட்டுகின்றார்.

உங்களை போன்ற ஊடகங்கள் தான் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்றும் அதன் மூலம் அவர் தினமும் விளம்பரத்தில் வருவது போல வருவதாகவும், அதை அவர் விரும்புவதாகவும் தெரிவித்தார். பேட்டியின் போது, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். முன்னதாக கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள அம்மா மருந்தகத்தில் திடீர் ஆய்வு நடத்தி பின்பு கூட்டுறவு வாரவிழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=NV_WvlmeHGg” width=”720″ autoplay=”yes”]

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories