February 21, 2026, 2:54 AM
25.6 C
Chennai

ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பின் போது… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

srirangam paramapathavasal
srirangam paramapathavasal

ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பின் (25-ஆம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு) போது பக்தர்களுக்கு அனுமதியில்லை……

வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு, பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

108 வைணவத் தலங்களில் முதன்மையானது பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படுகிற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 7 பிரகாரங்கள் 54 உப சந்நிதிகள் என 150 ஏக்கருக்கு மேல் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இங்கு மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 14-ஆம் தேதி திரு நெடுந்தாண்டகம் என்கிற நிகழ்வுடன் தொடங்குகிறது.  முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் என்கிற பரமபதவாசல் திறப்பு வரும் டிசம்பர் 25-ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது.

srirangam paramapathavasal2
srirangam paramapathavasal2

தமிழ்ப் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த விழாவில் வெளிநாடுகளில் இருந்து உட்பட லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். பருவ மழை தீவிரம், கொரோனா அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும் ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்விற்கான பந்தல், தடுப்புகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கோயில்ஆயிரங்கால் மண்டபம் அருகில் பந்தல் அமைப்பது. தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு  பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வழக்கம் போல் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது, வாகன நிறுத்துமிடம், மருத்துவ முகாம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு  கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக  வரும் 24-ஆம் தேதி மாலை முதல் 25-ஆம் தேதி காலை 8 மணி வரை (25-ஆம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு) ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை 8 மணிக்கு பிறகு ஆன் லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் அரசு  வழிகாட்டுதலின்படி தரிசனம்  அனுமதி வழங்கப்படும்.

பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றவும் வயதானவர்கள், குழந்தைகள்,  கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வருகைமைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,ஆங்கில ஆண்டு கணக்கின்படி நடப்பாண்டில் ( 2020) ஜனவரி 5-ஆம் தேதியும் வரும் டிசம்பர் 25-ஆம் தேதியும் என ஒரே ஆண்டில் இருமுறை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • சேகர் டீலக்ஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories