December 5, 2025, 9:29 PM
26.6 C
Chennai

ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பின் போது… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

srirangam paramapathavasal
srirangam paramapathavasal

ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பின் (25-ஆம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு) போது பக்தர்களுக்கு அனுமதியில்லை……

வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு, பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

108 வைணவத் தலங்களில் முதன்மையானது பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படுகிற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 7 பிரகாரங்கள் 54 உப சந்நிதிகள் என 150 ஏக்கருக்கு மேல் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இங்கு மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 14-ஆம் தேதி திரு நெடுந்தாண்டகம் என்கிற நிகழ்வுடன் தொடங்குகிறது.  முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் என்கிற பரமபதவாசல் திறப்பு வரும் டிசம்பர் 25-ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது.

srirangam paramapathavasal2
srirangam paramapathavasal2

தமிழ்ப் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த விழாவில் வெளிநாடுகளில் இருந்து உட்பட லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். பருவ மழை தீவிரம், கொரோனா அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும் ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்விற்கான பந்தல், தடுப்புகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கோயில்ஆயிரங்கால் மண்டபம் அருகில் பந்தல் அமைப்பது. தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு  பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வழக்கம் போல் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது, வாகன நிறுத்துமிடம், மருத்துவ முகாம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு  கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக  வரும் 24-ஆம் தேதி மாலை முதல் 25-ஆம் தேதி காலை 8 மணி வரை (25-ஆம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு) ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை 8 மணிக்கு பிறகு ஆன் லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் அரசு  வழிகாட்டுதலின்படி தரிசனம்  அனுமதி வழங்கப்படும்.

பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றவும் வயதானவர்கள், குழந்தைகள்,  கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வருகைமைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,ஆங்கில ஆண்டு கணக்கின்படி நடப்பாண்டில் ( 2020) ஜனவரி 5-ஆம் தேதியும் வரும் டிசம்பர் 25-ஆம் தேதியும் என ஒரே ஆண்டில் இருமுறை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • சேகர் டீலக்ஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories