கோவிலில் புகுந்த பாம்பு! ஒரு மணிநேரம் போராடி பிடிப்பு!

Published:

snake
snake

கோவில் கட்டிடத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து விட்டனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஸ்ரீ ராகவேந்திரா கோவில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த கோவில் கட்டிடத்திற்குள் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு நுழைந்துவிட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கோவிலுக்குள் பதுங்கி இருந்த பாம்பை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பிடித்து விட்டனர். அதன்பிறகு தீயணைப்புத்துறையினர் பிடிபட்ட கட்டு விரியன் பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Related articles

Recent articles

spot_img