ட்விட்டரில் இந்த அம்சம்.. என்ன ஆகும்..?

twitter - 2026

ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டும் என அதன் யூஸர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் ட்விட்டரின் அசல் வடிவமைப்பை எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டோம் என ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து அடம்பிடித்து வந்தது.

ஒரு SMS-யை எப்படி அனுப்பிட்டால், அதை மாற்ற முடியாதோ? அதேபோல் தான் ட்வீட்டும் ஒருமுறை போட்டால் போட்டது தான் என யூஸர்களிடம் ட்விட்டர் நிர்வாகம் கறார் காட்டி வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதலே மனதை மாற்றிக்கொண்ட ட்விட்டர் நிறுவனம் எடிட் அம்சத்தை சேர்ப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. இதற்கு காரணம் உலகின் நெம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தான். சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கிய அவர், எடிட் பட்டன் வேண்டுமா? என்பது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றிணை நடத்தினார்.

அதற்கு ஏராளமானோர் வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே ட்விட்டரின் தகவல்தொடர்புக் குழு, திடீரென எடிட் பட்டன் குறித்து சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது.

ஆனால் தற்போது எலான் மஸ்க் ட்விட்டரை முழுவதுமாக வாங்கி விட்டதால் நிச்சயமாக எடிட் பட்டன் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி மைக்ரோ-பிளாக்கிங், “ட்விட்டர் ஒருபோதும் எடிட் பட்டனைக் கொண்டு வராது” என்று அறிவித்தார்.

ஆனால் இப்போது ட்விட்டர் புதிய ட்விட்டர் எடிட் பட்டனைக் கொண்டுவருகிறது, இது தவறு என்று அறிவிக்கிறது. உண்மையில் ட்விட்டர் எப்போதும் எடிட் பட்டனில் வேலை செய்து வருகிறது. பெறப்பட்ட தரவுகளின்படி.

நீங்கள் எடிட் பட்டன் மூலம் மாற்றிய ட்வீட்களின் அனைத்து பதிவுகளையும் ட்விட்டர் உங்களுக்குக் கீழே காண்பிக்கும் எனக்கூறப்படுகிறது.

தற்போது ட்விட்டரில் எடிட் அம்சத்தை சேர்க்கும் பட்சத்தில், அந்த ட்வீட் எத்தனை முறை எடிட் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களும் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது யூஸர்கள் எடிட் செய்ய உள்ள ஒவ்வொரு ட்வீட்டையும் ட்விட்டர் நிர்வாகம் கண்காணிக்க உள்ளது. அதேபோல் ஒரு ட்வீட்டை நீங்கள் எத்தனை முறை எடிட் செய்தீர்கள் என்ற History-ம் காண்பிக்கப்படும்.

இதன் மூலம் பயனர்கள் தவறான எதை வேண்டுமானாலும் பதிவிட்டுவிட்டு, பின்னர் எடிட் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என என்ண முடியாது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஜேன் மன்சுங் வோங் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்டில், எடிட் செயல்பாடு எவ்வாறு மாறாமல் இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.

அதாவது முதன் முதலாக பதிவிட்ட அதே ட்வீட் உடன், திருத்தப்பட்ட ட்வீட் பற்றிய வரலாற்றுடன் இருக்கும் படி எடிட் பட்டன் உருவாக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

ட்வீட் திருத்தப்பட்டது தொடர்பான வரலாறு அனைத்து யூஸர்களும் பார்க்கும் படி அமைக்கப்படுமா? அல்லது அந்தந்த ட்விட்டர் கணக்கின் உரிமையாளர்கள் மட்டுமே பார்க்கும் படி இருக்குமா? என்பது பற்றி இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இதனிடையே APP’s ஆராய்ச்சியாளரான அலெஸாண்ட்ரோ பலுஸ்ஸி, எடிட் பட்டனைப் போன்ற ஸ்கிரீன் ஷாட்களை ட்வீட் செய்திருந்துள்ளார்.

அந்த ஸ்கிரீன் ஷாட்டில், ஒரு ட்வீட்டிற்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகளை அழுத்தினால் ஓபன் ஆகும் மெனுவில் “எடிட் ட்வீட்” ஆப்ஷன் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் தனது புளூ லேப்பில் எடிட் பட்டன் பற்றி சோதனை நடத்தி வரும் அதே சமயத்தில், யூஸர்களுக்கு எடிட் ஆப்ஷனை கொடுத்தால் என்னென்ன மாதிரியான பாதுகாப்புச் சிக்கல்களைச் சந்திக்கக்கூடும் என்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories