December 6, 2025, 3:23 AM
24.9 C
Chennai

நெல்லையப்பர் கோயில் உடையவர் லிங்கம் மரகத லிங்கமா? விளக்கம் அளிக்க வேண்டும்!

nellaiyappar temple shivlinga pooja - 2025

வருடத்தில் 8 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு காட்சிதரும் நெல்லையப்பர் திருக்கோவில் உடையவர் லிங்கம் மரகதலிங்கம் என செய்திகள் வெளியாகிய நிலையில் நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்தியுள்ளது.

நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது . பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில் 27.3.2023. முதல் 3.4.2023 வரை தினமும் மாலை சாயரட்சை பூஜை (மாலை 5.30 – 6) காலத்தில் நெல்லையப்பர் கோயிலில் ஆத்மார்த்த பூஜைக்கென வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய உடையவர் லிங்கம் கருவறையிலிருந்து வெளிவந்து பங்குனி உத்திர திருவிழா காலத்தில் மட்டுமே உத்ஸவ மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் மண்டபத்தின் முகப்பில் வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறும்.

இந்த பங்குனி உத்திர திருவிழா நாட்களின் சாயரட்சை காலத்தில் மட்டுமே இந்த உடையவர் லிங்கத்தை பக்தர்களாகிய நாம் தரிசிக்க முடியும். இந்த உடையவர் லிங்கம் மரகதலிங்கம் என செய்திகள் வெளியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் இது மரகதலிங்கமாக இல்லாத நிலையில் அவ்வாறு தவறாக செய்தி பரப்பப்படுவது, கோவில் ஊழியர்களுக்கும் அர்சகர்களுக்கும் பிற்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும். மரகதலிங்கம் எங்கே என்ற கேள்வி எழக்கூடும். உண்மையில் மரகதலிங்கமாக இருப்பின் அதனை உரிய முறையில் ஆவணப்படுத்தி பாதுகாப்புடன் பூஜை செய்ய வேண்டும் இல்லையெனில் அதனை மாற்றிவிடக் கூடும்.

இது குறித்து நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories