February 16, 2025, 9:28 PM
27.2 C
Chennai

காங்கிரஸ் தூய்மையாகிறது; ஜெயந்தி நடராஜன் வழியில் வாரிசுடன் ‘ப.சிதம்பர’மும் வெளியேறினால் நல்லது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

E_V_K_S__Elangovan சென்னை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் விலகலால் காங்கிரஸ் தூய்மையடைந்து வருகிறது; வாரிசுடன் இன்னொருவரும் (ப.சிதம்பரம்) வெளியேறினால் காங்கிரஸுக்கு விமோசனம் பிறக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த திருமதி. ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறர். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த இவர் கடந்த டிசம்பர் 2013 இல் பதவியை விட்டு விலகினர். கடந்த 13 மாதங்களாக மத்திய அமைச்சரவையிலிருந்து ஏன் விலகினேன் என்று எந்த விளக்கமும் கூறாமல் இருந்த ஜெயந்தி நடராஜன் தற்போது காங்கிரஸ் தலைமை மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளர். பதவி விலகும் போது வராத ஞானோதயம் இப்போது திடீரென்று ஞானோதயம் பீறிட்டு கிளம்பியிருக்கிறது. இது மோடியின் அறிவுரையால் ஏற்பட்டதா ? மோடியின் பயமுறுத்தலால் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த ஜெயந்தி நடராஜன் திடீரென்று ஏற்பட்ட அரசியல் விபத்தின் காரணமாக 1984 இல் காங்கிரசில் சேர்நத இவர் 1986 முதல் 2013 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்pனராக தொடர்நது பதவி சுகத்தை அனுபவித்து வந்தர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொண்டோ, சேவையோ செய்யாமல் தொடர்நது 27 ஆண்டுகாலமாக மாநிலங்களவை உறுப்pனராக இருந்து கின்னஸ் சாதனையை படைத்தவர் தான் ஜெயந்தி நடராஜன். காங்கிரசிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது, அன்றைய பிரதமர் ஐ.கே. குஜ்ரால் அவர்களிடம் கெஞ்சி, கூத்தாடி அங்கேயும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து பதவியை அனுபவித்ததை யாரும் மறந்துவிட நான்கு தலைமுறையாக இவரது குடும்பம் காங்கிரசுக்கு உழைத்ததாகக் கூறுகிறர். இவரது மூதாதையர்கள் காங்கிரசுக்கு உழைத்தது எவ்வளவு உண்மையோ, அதேபோல 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்ட்டதற்கும் இவரது குடும்பம் தான் காரணம் என்பதை எவருமே மறுக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜர் கடுமையான உழைப்pன் மூலம் பொற்கால ஆட்சியில் நிகழ்த்தப்ட்ட சாதனைகளை எல்லாம் மூன்றே ஆண்டு முதலமைச்சர் பதவி மூலமாக படுகுழிக்கு தள்ளிய பாவத்தை செய்தவர்கள் யர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்கள். இவரது தாத்தா பெரியவர் பக்தவச்சலம் ஆட்சிக்காலத்தில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிட்டுக் குருவிகளை சுட்டுத் தள்ளுவது போல தமிழ் உணர்வாளர்களை சுட்டுத் தள்ளினர். அதுமட்டுமல்லாமல், கிடங்கில் சேமிக்கப்ட்ட அரிசியை உரிய நேரத்தில் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யாத காரணத்தால் தான் 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி  தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது. காங்கிரசை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிற ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினர் சர்பாக கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் காங்கிரசை விட்டு விலகியதால் இனி, காங்கிரசுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. அதற்காக உங்களுக்கு எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தகும். மறைந்த தலைவர் ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியேர் வைத்த நம்பிக்கைக்கும், பாசத்திற்கும் நீங்கள் செய்த கைமாறு இதுதானா ? பதவி விலகுகிற போது அப்பழுக்கற் காங்கிரஸ் தலைவர்கள் மீது சேற்றை வரி இறைக்கிறீர்களே, இதைவிட நன்றிகெட்ட செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா ? உங்களை யர் மன்னித்தாலும், காங்கிரஸ் கட்சியிலிருக்கிற தொண்டர்கள் எவரும் மன்னிக்க மாட்டார்கள். கங்கை தூய்மைப்ப டுகிறதோ இல்லையோ, தாங்கள் காங்கிரசை விட்டு விலகியதால் இனி காங்கிரஸ் கட்சி மேலும் பலமடங்கு தூய்மைப்படும். இன்னும் ஒருவர் தமது வாரிசோடு வெளியேறினால் தமிழக காங்கிரசுக்கு நிச்சயம் விமோசனம் ஏற்படும். ஏனெனில் கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக பத்தாண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும், மக்களை சந்திக்க பயந்து ஓடி ஒளிந்த போது காங்கிரஸ் தொண்டர்கள் எவ்வளவு வேதனைப்ட்டர்கள் என்பதை வர்த்தைகளால் வடிக்க இயலாது. தியாகிகளை காங்கிரஸ் என்றைக்குமே மதித்திருக்கிறது. துரோகிகளையும், சந்தர்பவாதிகளையும் காங்கிரஸ் கட்சி தூக்கி எறிய எப்போதும் தயங்கியதில்லை. அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் நீங்களாகவே வெளியேறியதற்கு மீண்டும் நன்றியை தெரிவித்து, எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துகிறேன்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Astro around Indian Stock Market and our future generation!

Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

Topics

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Astro around Indian Stock Market and our future generation!

Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Entertainment News

Popular Categories