காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அண்மையில் நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இருப்பதாக வெளியிட்ட கருத்துக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
புது தில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் குஷ்பு கூறுகையில் காங்கிரஸ் கட்சி யாரை நம்பியும் இல்லை. கார்த்தி சிதம்பரம்தான் காங்கிரஸ் தயவை நம்பி இருக்கிறார். யாருடைய துணையுமின்றி காங்கிரஸ் கட்சி வலுவுடன் விளங்கும்’ என்றார்.
 
இதே பிரச்சனை தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில்அரசியல் வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக கார்த்தி பேசுவதை நான் பொருள்படுத்துவதில்லை” என்றும் இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending