இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் கிரிப்டோ கிறிஸ்துவர்களை வெளியேற்றுக: ராம.கோபாலன்

ramagopalan2 - 2026

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் கிரிப்டோ கிறிஸ்துவர்களை வெளியேற்ற வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

இந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்..

இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களைப் பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என அரசு கூறிக்கொண்டது. இந்து சமயப் பணி செய்யும் துறையாக இது இருக்கிறது. இதற்காக பிரத்யேக தேர்வு நடத்தி, இந்துக்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை பணி என்பது அரசு பணி என்பது மட்டுமல்ல. இந்து சமயப்பணி என்பதால், அதில் பணியாற்றுபவர்களுக்கு இந்து சமயத்தின் மீது பற்றும், நம்பிக்கையும், ஈடுபாடும் இருத்தல் அவசியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தகைய பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மதம் சம்பந்தமான உண்மையான விவரத்தை மறைத்திருந்தால் அது குற்றமாகும்.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

அப்படியில்லாமல், வேலையில் சேர்ந்த பின்னர் இந்து சமயத்தைவிட்டு வேற்று மதத்திற்கு மாறியிருந்தால், தார்மீக ரீதியில் அவர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டும். தனக்கும் உண்மையாக இல்லாமல், தான் செய்யும் பணிக்கும் உண்மையாக இல்லாதவர்களை இந்து சமய அறநிலையத்துறை, பணியிலிருந்து நீக்குவது கடமையாகும். அதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட திட்டங்களின்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்.

சமீபத்தில், பா.ஜ.க. மாநிலப் பொறுப்பாளர் கே.டி. ராகவன், இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் மறைமுக (Crypto) கிறிஸ்தவர்கள் பற்றி கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று கருத்தினைத் தெரிவித்தார். அதற்குக் கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கடிதம் ஊடகங்களில் வந்துள்ளது.

chrisitan federation - 2026

இதிலிருந்து கிறிஸ்தவ மதத்தின் திட்டமிட்ட சதியானது வெட்டவெளிச்சமாகியுள்ளது. கிறிஸ்தவர்கள், சாமி பிரசாதம் எனக் கொடுத்தால்கூட வாங்க மாட்டார்கள். ஆனால், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையில் இருந்து தரப்படும் ஊதியத்தை பெறலாமா?

இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

சுமார் 40,000 கோயில்களை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை, சில ஆயிரம் கோயில்களில் தான் நித்திய பூஜை நடைபெறுகிறது. பல்லாயிரம் கோயில்களில் வழிபாடு, விளக்கு இல்லை, விழாக்கள் போன்றவை நடைபெறுவதில்லை, முறையாக கும்பாபிஷேகமும் நடைபெறாமல் சீரழிக்கப்படுகின்றன.

சுமார் 1000 கோயில்கள் காணாமல் போயிருக்கின்றன. இதுபோன்ற முறையற்ற நடவடிக்கைகளுக்கு, இந்த மறைமுக, மதமாறிய கும்பலும் காரணமாக இருக்கலாம்.

இது இந்து திருக்கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல். எனவே, இந்து சமய அறநிலையத்துறை இது குறித்த முறையான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். அப்படி மறைமுக கிறிஸ்தவர்களாக இருப்போரை உடனடியாக பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை, ஒளிவு மறைவின்றி எடுக்க தயக்கம் காட்டக்கூடாது என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது… – என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories