சென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா?: ஐ.டி. நிறுவனங்கள் ஆழ்ந்த யோசனை!

சென்னை:
கனமழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவை ஐ.டி. நிறுவனங்களும்தான்! பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ள ஐ.டி.நிறுவனங்கள் எதிர்காலத்தில் சென்னையிலேயே தங்களால் நீடிக்க முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதனால் ஊழியர்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஐ.டி. நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு விடுப்பு, முன்னதாகவே சம்பளப் பணத்தில் ஒரு பகுதியை வழங்குதல் உள்ளிட்டவற்றால் திருப்தி செய்துள்ளன.

அண்மையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாம்பரம், முடிச்சூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. பெரும்பாலான ஐ.டி.நிறுவனங்களின் தரைத் தளங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு, பெரும் சேதம் அடைந்தன. இதில், ராமபுரம் டி.எல்.எப். வளாகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்கள் தற்போது வெள்ள பாதிப்பு குறைந்த பிறகும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றது. டி.எல்.எஃப்பில் இயங்கி வந்த சில நிறுவனங்கள் தாற்காலிகமாக தங்கள் ஊழியர்களை நகரின் வேறு கிளை அலுவலகங்கள், அல்லது பெங்களூர், மைசூர், தில்லி உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மாற்றி விட்டு சமாளிக்கின்றன.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு கணினிவழி சேவை செய்து வருமானம் ஈட்டிவந்த நிறுவனங்கள், வெள்ளம் கொடுத்த இழப்பில் இருந்து மீள முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முன்னணி நிறுவனங்களைத் தவிர, நடுத்தர நிறுவனங்கள் பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ளன.

சென்னை வெள்ளத்தில் ஒரு வாரம் எந்த வேலையும் நடைபெறாத நிலையில், இந்தக் காலாண்டு வருமானம் பெருமளவில் குறையும் என்று பிரபல நிறுவனங்களான டாடா, விப்ரோ தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவற்றின் பங்குச் சந்தை நிலவரத்திலும் மாற்றம் ஏற்பட்டு பங்கு மதிப்பும் சரிந்தது.

டேக் சொல்யூஷன்ஸ் போன்ற நடுத்தர சாப்ட்வேர் நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பங்கு மதிப்பு ஒரு சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. சென்னையில், 450 ஊழியர்களுடன் இயங்கும் இந்த நிறுவனம், கனமழை வெள்ளத்தில் ஒரு வாரம் முழுவதும் மூழ்கி இருந்ததால் ஊழியர்கள் பணிக்கு வரவே இயலவில்லை. வேல எதுவும் நடைபெறவில்லை. இதே போல பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஹெக்சாவேர் நிறுவனமும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. சென்னையில் உள்ள இதன் கிளை அலுவலகம் மூலம்தான் உலக அளவில் 23% வருமானத்தை அந்நிறுவனம் ஈட்டி வந்தது. வெள்ளத்தால் இப்போது அந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகம் திகைத்துப் போயுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான பெருங்களத்தூரில் இயங்கி வரும் அசெஞ்சர் நிறுவனமும் இதே பாதிப்பில் உள்ளது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

சில நடுத்தர நிறுவனங்கள் பெங்களூரு,கோவைக்கு மாற்றப்பட்டு, அதன் பணியாளர்கள் அங்கே மாற்றப்பட்டனர். அதனால், அதன் பணிகள் ஓரளவே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திருச்சி, மதுரை போன்ற சிறு நகரங்களுக்கு இடம்பயரலாமா என்று சில நிறுவனங்கள் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பல ஐ.டி. நிறுவனங்களும், ஒரு வார கால அலுவலக முடக்கத்துக்குப் பின்னர், நிலுவைப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக, தங்கள் நிறுவன ஊழியர்களை இரவு வெகு நேரம் வரை இருக்க வைத்து, பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில் எதிர் காலத்தில் சென்னையில் தொடர்ந்து தங்கள் வர்த்தகத்தை நீடிக்க முடியுமா என்ற யோசனையில் ஐ.டி. நிறுவனங்கள் பலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories