மோடி வெற்றி பெறவேண்டும் என தெருத் தெருவாக அலைந்தவர் வைகோ! ஸ்டாலின் இன்று நாயுடுவுடன் பேசினார் நாளை மோடியுடன் பேசுவார்!

thambidurai - 2026

  • மோடி வெற்றி பெற வேண்டுமென்று தெருத் தெருவாக அலைந்தவர்தான் வை.கோ.,!அதே நேரத்தில் தி.மு.க கட்சியினை தோற்கடித்ததும் வை.கோ தானே! ஆக மு.க.ஸ்டாலினுக்கு வை.கோ மீது கோபம் இருக்கும் என்று காண்பிக்க உள்ளாரோ..! காண்பிப்பார்!
  • ஸ்டாலின் இன்று சந்திரபாபு நாயுடுவிடம் போசினார்; நாளை மோடியிடமும் பேசுவார்., அரசியலில் எதுவும் நடக்கலாம்!
  • 4 ½ வருடங்களாக சந்திரபாபு நாயுடுவிற்கு மோடி நல்லவராக இருந்த நேரத்தில் தற்போது…? ஸ்டாலின் நல்லவரா? அதே நேரத்தில் 4 ½ வருடங்களாக எதிர்த்த மோடி அரசின் அமித்ஷாவை அழைத்து கருணாநிதிக்கு நினைவேந்தல் நடத்தவில்லையா?
  • மத்திய அரசின் திட்டங்கள் இந்தியில் உள்ளதால் எல்லா மக்களுக்கும் புரியவில்லை, இந்தி என்கின்ற பெயரை காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, பா.ஜ.க ஆட்சியாக இருந்தாலும் சரி… அடிமைப்படுத்தாதீர்கள் ?
  • தமிழகத்தினை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான் – இந்திக்கு எப்போதும் ஆதரவாக இருக்க மாட்டோம்!
  • இந்திக்கு என்றுமே ஆதரவாக இருக்க மாட்டோம்! தமிழில் தான் செயல்படுவோம் – தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் மத்திய அரசு போதிய அதிகாரம் தரவேண்டும்., மத்திய அரசின் திட்டங்கள் தமிழ் மொழியில் வேண்டும், ஏனென்றால் எல்லாம் இந்தியில் தான் வருகின்றன – மத்திய அரசின் திட்டங்களின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு புரிகின்றதா? இந்தியா வலிமை நாடாக இருந்தால் மாநிலங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும்
  • மோடி அவர்கள் எங்களது நண்பர் தான்! மத்திய அரசும், மாநில அரசும் சுமூகமாக செயல்பட்டு வருகின்றது – ஆனால்? கட்சி வேறு, ஆட்சி வேறு.! எங்களுக்கு கொள்கைகள் இருக்கின்றன !

– இவை எல்லாம் மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரையின் ஒப்பன் டாக்!


கரூரில் காந்தி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடப் பணிகளை கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை நேரில் பார்வையிட்டார்.

அப்போது, மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். விரைவில் அனைத்து வேலைகளும் நடைபெறவேண்டுமென்றும், மக்களின் பயன்பாட்டிற்கு வரும் அளவிற்கு சிறப்பான முறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகள் அமைய வேண்டுமென்றார் தம்பிதுரை.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை., செய்தியாளர்களுடன் பேசினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியவை…!

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

அப்போது இங்கிலாந்து  நாட்டில்  கன்சர்வேடிவ் கட்சியை  சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர்  பீட்டர் போன்,  இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையானது.,  உலகின்  மிக உயரமான  சிலை  என்றும், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா ஏழை நாடு என்று கூறி., இங்கிலாந்து நாட்டிடம்  நலத் திட்டங்க்ளுக்கு ரூ. 10  ஆயிரம் கோடி  நிதி  உதவியை  பெற்றுள்ளது.  அப்படி  இருக்க  உலகின்  மிகப்  பெரிய சிலையை  நிறுவுவது  முட்டாள் தனமானது”  என  கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், இந்தியா ஏழை நாடு கிடையாது., அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! இங்கிலாந்து தான் ஏழை நாடாக மாறி வருகின்றது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு, ஒரு பெரிய வல்லரசாக வருகின்ற வரைக்கும் இந்த நாடு வளர்ந்து கொண்டு வருகின்றது. ஆகவே உலக அளவில் பாராட்டு கிடைக்க கூடிய வகையில் உலக அளவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்ததோடு, பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது. ஆகவே, நாம் எதிர்பார்த்தபடி இல்லாமல் இருந்தாலும், ஒரளவு சிறந்து விளங்குகின்றது.

ஆனால் சமீப காலமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வினாலும், ரூபாய் நோட்டு வீழ்ச்சியானாலும் இந்தியா தற்போது சரிவை கண்டு வருகின்றது. ஆனாலும், உலக அளவில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் சரிவை அடுத்துதான் இந்தியாவும் அப்படியே உள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி உள்ளது உண்மை தான்! அதுவே இந்தியாவிலும் உள்ளது. ஆகவே ஒரு சில திட்டங்கள் கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே அது மத்திய அரசின் நடவடிக்கையில் தான் அமையும்.

இந்தியாவில் உள்ள அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியில் கல்வி பயில வேண்டும், தமிழ்நாட்டில் தாய் மொழியான தமிழ்மொழியில் தான் திட்டங்களையும், கல்வியையும் செயல்படுத்தவேண்டும். அந்த நிலையில் தான் தற்போதைய அ.தி.மு.க அரசு செயல்படுகின்றது. ஆகவே அத்தகைய கொள்கைகளுடன் கூடியவர்களுடன் தான் நாங்கள் (அ.தி.மு.க) இணைவோம்.

மாநில அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதி இன்றுவரை வரவில்லை, ஆகவே தான் நான்(தம்பித்துரை) மத்திய அரசு எங்கள் (தமிழ்நாடு) மாநிலத்திற்கு தரவேண்டிய ரூ 18 ஆயிரம் கோடி நிதியை இன்றும் கேட்டு வருகின்றோம். இதற்காக, மத்தியில் மோடியை, தமிழக முதல்வர் பழனிச்சாமி ரூ 11 ஆயிரத்து 450 கோடி வரவேண்டிய நிலையில் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

இதே போல தான் ஜி.எஸ்.டிக்கு வரவேண்டிய நிதியும் வரவேண்டும். ஆக மொத்தம் சேர்த்து ரூ 18 ஆயிரம் கோடி வரவேண்டி உள்ளது. ஆகவே நிதி ஆதாரம்  மத்திய அரசு கொடுக்க வேண்டியது., அந்த அரசு தராமல், மாநில அரசு எப்படி செயல்பட முடியும்?

இந்தியா ஒரு வல்லரசு நாடாக அமைய வேண்டும் என்றால், எட்டாவது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளையும் செயல்படுத்த வேண்டும். தமிழ் மொழிதான் எங்கள் தாய்மொழி, இந்திக்கு நாங்கள் ஆதரவாக இருக்க மாட்டோம், இருமொழி கொள்கையை தான் ஆதரிப்போம்,. இதுவரை மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கு புரிகின்றதா ? நாட்டு மக்களுக்கு திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால் திட்டங்களின் பெயர் எளிமையாக இருக்க வேண்டும்.

சர்வ சிக்‌ஷ அபியான் என்கின்ற திட்டம் அனைவருக்கும் கல்வி திட்டம். அதே நேரத்தில் 2001ல் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் போது தான் அந்த திட்டத்தினை அனைவருக்கும் கல்வி என்ற பெயரையே அறிமுகப்படுத்தியவன் நான்.

அதே திட்டத்தினை தற்போது சர்வ சிக்‌ஷ அபியான் என்கின்ற திட்டமாக கூறும் போது யாருக்கு இந்த திட்டம் புரிகின்றது? இதே போலதான் பிரைம் மினிஸ்டர் யோஜ்னா, முத்ரா யோஜ்னா ஆகிய திட்டங்களின் பெயரே பொதுமக்களுக்கு புரியவில்லை. ஆகவே தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்களை தமிழ்மொழியில் அறிவியுங்கள்.

இந்தி வார்த்தையே வைத்துக் கொண்டால் திட்டம் எல்லோருக்கும் புரிய வில்லை. ஆகவே, ஆளுகின்றது பா.ஜ.க ஆட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி இந்தியை புகுத்தாதீர்கள்!

ஆகவே, இது போன்ற பல்வேறு போராட்டங்களை வைத்து தான் எங்களது அ.தி.மு.க இயக்கம் செயல்பட்டு வருகின்றது. தமிழ் மொழியை காத்து, தமிழ் இனத்தினை காப்பதோடு, இந்தியர்களாக நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

மு.க.ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து சொல்வதென்றால்… ஸ்டாலின் இன்று சந்திரபாபு நாயுடுவிடம் பேசினார். நாளை மோடியிடமும் பேசுவார்! அரசியலில் எதுவும் நடக்காலாம். மோடியை விட ஸ்டாலின் நல்லவர் என்று சந்திரபாபு நாயுடு கூறி இருப்பது நகைச்சுவை! 4 ½ வருடங்களாக மோடி நல்லவராக சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்த நேரத்தில் தற்போது ஸ்டாலின் நல்லவரா? அதே நேரத்தில் 4 ½ வருடங்களாக எதிர்த்த மோடி அரசின் அமித்ஷாவை அழைத்து கருணாநிதிக்கு நினைவேந்தல் நடத்தியதுடன் ஓர் இணக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டார்!

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

அப்போது பா.ஜ.க இந்துத்துவா என்று தெரியாதா? ஆகவே இதில் யார் நல்லவர் ? யார் கெட்டவர் ? என்பதை அவர்கள் தான் கூறிக் கொள்ள வேண்டும். நாம் கூறமுடியாது!

சந்திரபாபு நாயுடுவின் முயற்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை கொடுக்கும் என்று வை.கோ கூறி இருப்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்…  இதே வை.கோ தான் மோடி ஜெயிப்பதற்காக தேர்தல் உடன்பாடு வைத்து, மோடி வெற்றி பெற வேண்டி தெருத் தெருவாக அலைந்தார்! காங்கிரஸ் கூட்டணி ஒழிய வேண்டும்,. காங்கிரஸ் கட்சி ஒழிய வேண்டுமென்று கூறி, காங்கிரஸ் கட்சியினால் தான் சிங்களத் தமிழன் கொல்லப்பட்டான் என்று காங்கிரஸ் கட்சியினை கடுமையாக சாடியவர்தான் வை.கோ.,

அதே வை.கோ தான், மோடியுடன் உடன்பாடு வைத்து தேர்தல் பணியாற்றியவர். மோடி வெற்றி பெறுவதற்கு வை.கோ வும் ஒரு காரணம். அவர் அதை மறுக்கட்டும் பார்ப்போம்..! அதே போல தான் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்பதற்கும் வை.கோ தான் காரணம்! ஏனென்றால் மக்கள் நலக் கூட்டணி என்று மூன்றாவது அணி வைத்துக் கொண்டு திமுக.,வைத் தோற்கடித்தார். ஆகவே ஸ்டாலினுக்கு வை.கோ மீது கோபம் உள்ளது என்பதை என்று காண்பிக்க உள்ளரோ?! நிச்சயம் காண்பிப்பார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories