எப்படி மோடியை இன்னும் விமர்சிக்கலாம்னு ஆலோசனை நடத்துறாரோ… தம்பிதுரை?

Published:

thambidurai - 2026

தமிழகத்தில் திமுக.,வுக்குப் போட்டியாக மோடியையும், பாஜக.,வையும் விமர்சிப்பதில் நம்பர் ஒன் இடத்தை வகிக்கிறார் அதிமுக.,வின் தம்பிதுரை.

தேசியக் கட்சிகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம் என்று திராவிடக் கொள்கையை பறைசாற்றி வந்த மு.தம்பிதுரை, கடந்த முறை மோடி மதுரை வந்த போதே மிகவும் நெருங்கிப் பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் மீண்டும் அவர் தனது கருத்துகளை அதே போல் பேசி வந்தார்.

இதனிடையே, தம்பிதுரையின் மோடி விமர்சனப் பேச்சுகள் குறித்து செய்தியாளர்கள் ஓபிஎஸ்ஸிடம் கேட்டனர். அதற்கு அவர், தாம் கூறும் கருத்துகள் குறித்து தம்பிதுரை அவ்வப்போது விளக்கம் கொடுத்து விடுவதாக கூறினார்.

இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்படியெனில், அதிமுக., தலைவர்களுக்குத் தெரிந்தும் ஆலோசனையின் பேரிலும்தான் தம்பிதுரை இவ்வாறு விமர்சனப் பேச்சுகளை அவிழ்த்து விடுகிறார் என்று கூறினர் பாஜக.,வினர்.

இந்நிலையில், இன்று கோவை, திருப்பூர் வந்த பாரதப் பிரதமர் மோடியை வரவேற்ற குழுவில் தம்பிதுரையும் இருந்தார். பின்னர் கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் தம்பிதுரை எம்.பி. சந்தித்துப் பேசினார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

கோவை விமான நிலையத்தில் 3 மணி நேரமாக தம்பிதுரையும், பொன். ராதாகிருஷ்ணனும் பேசி வருயதாகத் தகவல் வெளியானது. இதனால் அதிமுக., பாஜக., இடையே உடன்பாடு எட்டப்படும் என்று கூறப் படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img