சவுதி அரேபியாவில் திருமணமான ஒரே நிமிடத்தில் மணப்பெண்ணை, மணமகன் விவகாரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த திருமணத்தின் போது, திருமண நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் மணமகள் தனது தோழிகளுடன் போனில் எஸ்.எம்.எஸ் செய்துசெய்துள்ளார். இதை பார்த்து கோபமடைந்த மணமகன், மணமகளை விவகாரத்து செய்துள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் ஒரு மணிநேரத்திற்கும் எட்டு விவாகரத்துகள் நடைபெறுகிறது. விவாகரத்து செய்பவர்களில் 50 சதவிகிதம் பேர் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending