அறிமுகமானது தமிழகத்தின் முதல் மின்சார கார்

Published:

தமிழகத்தில் முதன்முறையாக மின்சார காரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகப்படுத்தினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சார கார் சேவையை, அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சட்டப்பேரவை வளாகத்திற்குள்ளே காரில் வலம் வந்தனர்.

மின்சார கார் தயாரிப்பை சென்னையில் தொடங்க உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது தமிழக அரசு-ஹூண்டாய் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் 10 லட்சம் மின்சார கார்களை தயாரிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு மின்சார காரின் விலை 30 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. கார் புறப்பட்ட 10 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர் பயணிக்கலாம். வீட்டில் பயன்படுத்தும் மின்சாரம் முழுமையாக சார்ஜ் செய்ய 19 மணி நேரம் ஆகும். நேரடி மின்சாரம் எனில் 6 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும்.
சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img