முதல்வருக்காக பால்குடம்,மிருத்யுஞ்சி,ஆயுஷ் ஹோமம்

Published:

முதல்வர் பரிபூரண நலம் பெறவேண்டி கீழப்பாவூரில் இருந்து பாவூர்சத்திரம் வென்னிமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு 1008 பால் குடம் மாவட்ட செய்லாளர் கே.ஆர்.பி,பிரபாகரன் எம்.பி தலைமையில் ,அம்பை எம்.எல்.ஏ.முருகையா பாண்டியன் முன்னிலயில் பெண்கள் எடுத்தன்ர் மேலும் இன்று கீழப்பாவூரில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த மகம் நட்சத்திரநாளில் கீழப்பாவூர் ஒன்றிய அதிமுக சார்பில் மிருத்யுஞ்சி ஹோமம், மற்றும் ஆயுஷ் ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பின்னர் நரசிம்மர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் 16 வகையான பூக்களால் அர்ச்சனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, நெல்லைபுறநகர் மாவட்ட செயலாளரும்,எம்.பியுமான கே.ஆர்.பி.பிரபாகரன், மாநிலகூட்டுறவு சங்க துணைத்தலைவர் கண்ணன், கீழப்பாவூர் ஒன்றியசெயலாளர் நடராஜன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சேர்மப்பாண்டி, நெல்லை மண்டல அண்ணா போக்குவரத்து கழக தலைவர் இளஅரசு,உட்பட பலர் கலந்து கொண்டனர்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img