December 6, 2025, 2:38 AM
26 C
Chennai

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்! விளக்கம்…

strick - 2025

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் கடந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களை பணிக்கு திரும்புமாறும், பணிக்கு திரும்பாத அரசு மருத்துவர்களின் இடங்களை காலி இடங்களாக அறிவிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இவரை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர் பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

gh dr - 2025

இன்றுடன் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன் என்பவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் ஏற்கனவே அவசர சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும் ஒரு சில சிகிச்சைகள் நாள்பட அவசர சிகிச்சைகளாக மாறும் அபாயம் இருப்பதாலும், புயல் காரணமாக காய்ச்சல் பரவி வரும் சூழல் காரணமாகவும், முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும், மீண்டும் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலும், எங்களுடைய இயக்குனர் கொடுத்த வேண்டுகோள் அடிப்படையிலும், ஜனநாயக சக்திகளும் நோயாளிகளும் கொடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும் எங்களுக்கு வேறு வழியே இல்லாமல் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நாங்கள் வாபஸ் பெறுகிறோம்

GH Dr S - 2025

ஆனால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாகவும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதில் தயவு செய்து தங்களுடைய கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விரைவில் கூட இருக்கும் தமிழக அமைச்சரவையில் எங்களது கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று நம்புகிறோம் என்றும், எங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவு செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் லட்சுமி நரசிம்மன் மேலும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி போராட்டம் வாபஸ் பெற்ற பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், போராட்டம் செய்த மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories