தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய்க்கு கடத்த இருந்த செம்மரக் கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் தரை விரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறி சான்று பெற்று கடந்த 2 ஆம் தேதி துறைமுகத்துக்குச் சென்ற கண்டெய்னரின் சீலை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அதற்குள் செம்மர கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கூறியபோது, கடந்த 2ஆம் தேதி சம்மரக் கட்டைகள் கடத்திய வழங்கில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இதில் ஈடுபடும் கும்பல் போலியாக கம்பெனிகள் பெயரில் செம்மரக் கட்டைகளை அனுப்பி வைக்கி்ன்றன. இதில் ஈடுபடும் தலைமறைவு கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அவர்களைப் பிடித்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
தூத்துக்குடி டூ துபாய்: ரூ.1.81 கோடி மதிப்பு செம்மரக் கட்டைகள் பறிமுதல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari