கீழ்ப்பாக்கம் ஏற்றுமதி நிறுவனத்தில் கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு!

Idol abduction 1 - 2026

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆராஅமுதன் கார்டன்ஸ் என்ற எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கோயில்களில் இருந்து திருடப்பட்ட புராதன சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார், போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் சென்று அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது அங்கு இந்து கோயில்களில் இருந்து திருடப்பட்ட உலோக அம்மன் சிலை, 2 அம்மன் கற்சிலைகள் பழமையான ஒரு கிருஷ்ணர் ஓவியம் கைப்பற்றினர், இது தொடர்பாக ஏற்றுமதி நிறுவனம் நடத்திய சுப்பிரமணியன் (58) என்பவரை கைது செய்தனர்.

அவர் பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளி என தெரியவந்தது. மேலும் இந்த சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர் அபய் குமார் சிங் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: கீழ்ப்பாக்கத்தில் கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் ஓவியம் ஆகியவை புராதனமாக இருக்கக்கூடும் என்பதால் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த சிலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எந்த நாட்டிற்கு கடத்தப்பட இருந்தது என விசாரணை நடத்தி வருகிறோம்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் சிறப்பாக பணியாற்றி அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை தமிழகத்திற்கு இந்திய தூதரகம் மூலமாக கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1985ம் ஆண்டு தென்காசி நரசிம்ம நாதர் கோயிலில் காணாமல் போன 5 சிலைகளில் அதிகார நந்தி, கங்கால நந்தர் ஆகிய சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல கடந்த 2017ம் ஆண்டு தஞ்சாவூர் விஷ்வநாதர் கோயிலில் காணாமல்போன நரசிம்மர், கிருஷ்ணா கணேஷ், சம்பந்தர், சோமசுந்தரர், விஷ்ணு ஆகிய 6 சிலைகள் கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் நாரேஸ்வரர் சிவன் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலைகளில் தடய அறிவியல் துறையின் புகைப்பட ஒப்பீட்டு மூலம் திருப்புராந்கர், திருப்புரசுந்திரி, வீனதாரா, நடராஜர், சுந்தரர், பறவை நாச்சியார் ஆகிய சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவை இந்திய தூதரகம் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2020 மற்றும் 2021ல் 17க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 40 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 74 தொன்மையான சிலைகள் பாண்டிச்சேரியில் பால்ராஜ ரத்தினம் என்பவரிடம் இருந்து மீட்கப்பட்டது. சிலை கடத்தல் தொடர்பாக சில வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. கொரோனா காலமாக இருந்ததால் வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories