மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தீ: பக்தர்கள் வேதனை!

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. பிரதான தெற்கு கோபுரம் அருகே உள்ள பவர் ரூமில் திடீரென தீப்பிடித்ததில் அந்த அறையில் இருந்த மின் சாதனங்கள் எரிந்து நாசமாயின.

கடந்த வாரம்தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுரத்தை ஒட்டிய ஆயிரங்கால் மண்டப கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டப பகுதி தீயின் வெப்பத்தால் சேதமடைந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு கோபுரம் அருகே உள்ள கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை ஒட்டி, கோயிலுக்கான குங்கும தயாரிப்புக் கூடம் உள்ளது. அதன் அருகில் பவர் ரூம் உள்ளது. கோயிலுக்கான மின் விநியோகம் இங்கிருந்துதான் செயல்படுத்தப் படுகிறது.

நேற்று மாலை, திடீரென மின் அறையில் இருந்து புகை வருவதைக் கண்ட குங்கும தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பதற்றத்துடன் சென்று பார்த்தனர். அப்போது அறையில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி, மின் சாதனங்கள் தீயில் எரிந்தபடி இருந்தன.

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தனர். இதனால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால், மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியிலுள்ள கடைகளை, வெள்ளிக்கிழமை இன்று பகல் 12 மணிக்குள் காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. கோயில் பாதுகாப்பு கருதி இத நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று அது கூறியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories