January 20, 2025, 6:45 PM
26.2 C
Chennai

பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வில் முறைகேடு: ஊழியர் கைது!

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி கிரைம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பள்ளிக்கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டதில், மதிப்பெண் வழங்குவதில் மோசடி நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை  மேற்கொண்ட சைபர் கிரைம் போலீஸார், இது தொடர்பாக 156 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இடைத்தரகர்கள், டேட்டோ எண்ட்ரி செய்யும் ஊழியர்கள் என 8 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களில் 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மின்வாரிய ஊழியர் சுப்ரமணியன் என்பவர், வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. டேட்டா எண்ட்ரி ஊழியர் ராஜேஷ் தலைமறைவாக உள்ளார். முக்கிய ஆவணங்களும் இவர்கள் இருவரிடம்தான் உள்ளன.

இதனால் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக உள்ள விநாயகமூர்த்தி என்பவரை சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்தனர். சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த  இவர், இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.

ALSO READ:  ராஷ்டிரீய ஹிந்து மகா சபா நடத்திய மஹா சண்டி யாகம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...