டிராக்கில் மாட்டிய டிராக்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்!

sengottai train track trakctor - 2026

செங்கோட்டை : ரயில் வரும் பாதையில் டிராக்கில் ஒரு டிராக்டர் மாட்டிக் கொண்டது, ரயில் டிரைவரின் சமயோசிதத்தால், பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்.

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கடந்த 22 ஆம் தேதி மதியம் 06028 என்ற எண் கொண்ட கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் 2.40 மணி அளவில் சுமார் 300 பயணிகளுடன் தமிழக பகுதியான செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரயில் எஸ் வளைவு அருகில் வந்த போதுதான், அந்த ரயிலை ஓட்டி வந்த டிரைவர் ஜான் கென்னடி என்பவர், திடீர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

ரயில் பாதையில், எஸ் வளைவு பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் குறுக்கே ஒரு டிராக்டர் நிற்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவர் அவசர அவசரமாக ரயிலை சுமார் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தி விட்டு செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதை அடுத்து செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைந்து வந்து தண்டவாளத்தின் குறுக்கே நின்ற டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டரை ஓட்டி வந்த தேவராஜன் மகன் சரவணன் (25) என்பவரை கைது செய்தனர்.

டிராக்டர் உடனே அப்புறப்படுத்தப் பட்டு, கொல்லம் தாம்பரம் ரயில் உடனடியாக அங்கிருந்து செங்கோட்டை நோக்கி அனுப்பப் பட்டது. கைது செய்யப்பட்ட டிராக்டர் ஓட்டுநர் சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ரயில் எஞ்சின் ஓட்டுனரின் சமயோசித திறமையால், மலைப் பாதையில் வந்து கொண்டிருந்த கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் பெரிய விபத்தில் இருந்து தப்பியது. ரயில் ஓட்டுனரை பயணிகள் வெகுவாக பாராட்டினர். இந்தச் சம்பவம் தமிழக-கேரள எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories