டிராக்கில் மாட்டிய டிராக்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்!

sengottai train track trakctor - 2026

செங்கோட்டை : ரயில் வரும் பாதையில் டிராக்கில் ஒரு டிராக்டர் மாட்டிக் கொண்டது, ரயில் டிரைவரின் சமயோசிதத்தால், பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்.

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கடந்த 22 ஆம் தேதி மதியம் 06028 என்ற எண் கொண்ட கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் 2.40 மணி அளவில் சுமார் 300 பயணிகளுடன் தமிழக பகுதியான செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரயில் எஸ் வளைவு அருகில் வந்த போதுதான், அந்த ரயிலை ஓட்டி வந்த டிரைவர் ஜான் கென்னடி என்பவர், திடீர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

ரயில் பாதையில், எஸ் வளைவு பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் குறுக்கே ஒரு டிராக்டர் நிற்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவர் அவசர அவசரமாக ரயிலை சுமார் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தி விட்டு செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதை அடுத்து செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைந்து வந்து தண்டவாளத்தின் குறுக்கே நின்ற டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டரை ஓட்டி வந்த தேவராஜன் மகன் சரவணன் (25) என்பவரை கைது செய்தனர்.

டிராக்டர் உடனே அப்புறப்படுத்தப் பட்டு, கொல்லம் தாம்பரம் ரயில் உடனடியாக அங்கிருந்து செங்கோட்டை நோக்கி அனுப்பப் பட்டது. கைது செய்யப்பட்ட டிராக்டர் ஓட்டுநர் சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ரயில் எஞ்சின் ஓட்டுனரின் சமயோசித திறமையால், மலைப் பாதையில் வந்து கொண்டிருந்த கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் பெரிய விபத்தில் இருந்து தப்பியது. ரயில் ஓட்டுனரை பயணிகள் வெகுவாக பாராட்டினர். இந்தச் சம்பவம் தமிழக-கேரள எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories