மனு கொடுத்தீங்க… சரி..! எம்.பி.கிட்ட வேற என்ன எதிர்பார்க்கிறீங்க? அதிர்ச்சி அளித்த தம்பிதுரை!

thambidurai - 2026

கரூர்:  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடையாக அறிவிக்க வேண்டும் என்றும், நடைபெறவுள்ள நாடாமன்ற கூட்ட தொடரில் இதுபற்றி குரல் எழுப்பப்படும் என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளுக்கு மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரச துறை சேர்ந்தவர்களுடன் கிராமங்களில் உள்ள பொது மக்களிடம் நேரடியாக சென்ற கோரிக்கை மனு பெற்று வருகிறார். இன்று கரூர் மாவட்டம் புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட மூர்த்திபாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கோரிக்கை மனு பெற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, கஜா புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக நாகை, தஞ்சை, புதுகோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் தென்னை மரங்கள், முந்திரி மரங்கள் உள்ளிட்டவை வேரோடு சாய்ந்து விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். திருச்சி, திண்டுக்கல்,கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கஜாபுயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடையாக அறிவிக்க வேண்டும் அப்போதுதான் உரிய நிவாரணம் கிடைக்கும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய வேண்டும் என்றால் பலநாட்கள் ஆகும் நிலை உள்ளது. மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த கேட்கவுள்ளோம்..

வரும் 11 ம் தேதி நாடாளுமன்றம் நடைபெறவுள்ள அ.தி.மு.க., சார்ந்த் எம்.பிக்கள் இது தொடர்பாக குரல் கொடுத்து காவிரி பிரச்சனையை எவ்வாறு தீர்வு சரிசெய்தோமோ அதே போல் கஜா புயல் நிவாரணத்துக்கும் குரல் கொடுப்போம்.

தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த பின்னர் இந்த ஆய்வு குழு அமைக்கப்பட்டள்ளது. ஆய்வு செய்த குழுவினர் இந்த புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இது போல் ஒரு புயல் தாக்கம் ஏற்பட்டது இல்லை என்றார்  மு.தம்பிதுரை!

இதனிடையே, 10 வருடங்களாகவே நீங்கள் மனுக்கள் தான் பெற்று வருகின்றீர்கள் என்று அங்கிருந்த மக்கள் சிலர் கூறிய போது, ஒரு எம்.பி யிடம் வேறு என்ன இருக்கின்றது? எல்லாம் அரசு தான் செய்ய வேண்டும் என்று அசாதாரணமாகக் கூறி, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories