மனு கொடுத்தீங்க… சரி..! எம்.பி.கிட்ட வேற என்ன எதிர்பார்க்கிறீங்க? அதிர்ச்சி அளித்த தம்பிதுரை!

thambidurai - 2026

கரூர்:  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடையாக அறிவிக்க வேண்டும் என்றும், நடைபெறவுள்ள நாடாமன்ற கூட்ட தொடரில் இதுபற்றி குரல் எழுப்பப்படும் என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளுக்கு மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரச துறை சேர்ந்தவர்களுடன் கிராமங்களில் உள்ள பொது மக்களிடம் நேரடியாக சென்ற கோரிக்கை மனு பெற்று வருகிறார். இன்று கரூர் மாவட்டம் புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட மூர்த்திபாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கோரிக்கை மனு பெற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, கஜா புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக நாகை, தஞ்சை, புதுகோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் தென்னை மரங்கள், முந்திரி மரங்கள் உள்ளிட்டவை வேரோடு சாய்ந்து விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். திருச்சி, திண்டுக்கல்,கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கஜாபுயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடையாக அறிவிக்க வேண்டும் அப்போதுதான் உரிய நிவாரணம் கிடைக்கும்.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய வேண்டும் என்றால் பலநாட்கள் ஆகும் நிலை உள்ளது. மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த கேட்கவுள்ளோம்..

வரும் 11 ம் தேதி நாடாளுமன்றம் நடைபெறவுள்ள அ.தி.மு.க., சார்ந்த் எம்.பிக்கள் இது தொடர்பாக குரல் கொடுத்து காவிரி பிரச்சனையை எவ்வாறு தீர்வு சரிசெய்தோமோ அதே போல் கஜா புயல் நிவாரணத்துக்கும் குரல் கொடுப்போம்.

தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த பின்னர் இந்த ஆய்வு குழு அமைக்கப்பட்டள்ளது. ஆய்வு செய்த குழுவினர் இந்த புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இது போல் ஒரு புயல் தாக்கம் ஏற்பட்டது இல்லை என்றார்  மு.தம்பிதுரை!

இதனிடையே, 10 வருடங்களாகவே நீங்கள் மனுக்கள் தான் பெற்று வருகின்றீர்கள் என்று அங்கிருந்த மக்கள் சிலர் கூறிய போது, ஒரு எம்.பி யிடம் வேறு என்ன இருக்கின்றது? எல்லாம் அரசு தான் செய்ய வேண்டும் என்று அசாதாரணமாகக் கூறி, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories