மனு கொடுத்தீங்க… சரி..! எம்.பி.கிட்ட வேற என்ன எதிர்பார்க்கிறீங்க? அதிர்ச்சி அளித்த தம்பிதுரை!

thambidurai - 2026

கரூர்:  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடையாக அறிவிக்க வேண்டும் என்றும், நடைபெறவுள்ள நாடாமன்ற கூட்ட தொடரில் இதுபற்றி குரல் எழுப்பப்படும் என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளுக்கு மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரச துறை சேர்ந்தவர்களுடன் கிராமங்களில் உள்ள பொது மக்களிடம் நேரடியாக சென்ற கோரிக்கை மனு பெற்று வருகிறார். இன்று கரூர் மாவட்டம் புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட மூர்த்திபாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கோரிக்கை மனு பெற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, கஜா புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக நாகை, தஞ்சை, புதுகோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் தென்னை மரங்கள், முந்திரி மரங்கள் உள்ளிட்டவை வேரோடு சாய்ந்து விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். திருச்சி, திண்டுக்கல்,கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கஜாபுயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடையாக அறிவிக்க வேண்டும் அப்போதுதான் உரிய நிவாரணம் கிடைக்கும்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய வேண்டும் என்றால் பலநாட்கள் ஆகும் நிலை உள்ளது. மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த கேட்கவுள்ளோம்..

வரும் 11 ம் தேதி நாடாளுமன்றம் நடைபெறவுள்ள அ.தி.மு.க., சார்ந்த் எம்.பிக்கள் இது தொடர்பாக குரல் கொடுத்து காவிரி பிரச்சனையை எவ்வாறு தீர்வு சரிசெய்தோமோ அதே போல் கஜா புயல் நிவாரணத்துக்கும் குரல் கொடுப்போம்.

தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த பின்னர் இந்த ஆய்வு குழு அமைக்கப்பட்டள்ளது. ஆய்வு செய்த குழுவினர் இந்த புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இது போல் ஒரு புயல் தாக்கம் ஏற்பட்டது இல்லை என்றார்  மு.தம்பிதுரை!

இதனிடையே, 10 வருடங்களாகவே நீங்கள் மனுக்கள் தான் பெற்று வருகின்றீர்கள் என்று அங்கிருந்த மக்கள் சிலர் கூறிய போது, ஒரு எம்.பி யிடம் வேறு என்ன இருக்கின்றது? எல்லாம் அரசு தான் செய்ய வேண்டும் என்று அசாதாரணமாகக் கூறி, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories