ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆஜர்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

radhakrishnan J - 2026

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த 75 நாட்கள் தொடர்பான சிகிச்சை விவரங்கள், சிகிச்சைல் தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி ஆணையத்திடம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே கொடுத்திருந்தார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டது தொடர்பான மருத்துவ அறிக்கைகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோர் இறுதி செய்த பின்னரே செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டது என்று அப்போலோ அளித்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்நிலையில் ஆணையத்தில் பலரும் முன்வைத்த சில கேள்விகள் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப் பட்டதாகக் கூறப் படுகிறது.

Related articles

Recent articles

spot_img