தற்காலிக ஆசிரியர்களைத் தடுத்தால்… சிறைதான்! செங்கோட்டையன் எச்சரிக்கை..!

Published:

14 June27 sengottaiyan - 2026

தற்காலிக ஆசிரியர்களைத் தடுத்தால், அவர்கள் குறித்து போலீஸில் புகார் அளிக்கப் பட்டு, நடவடிக்கை எடுக்கப் படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களையும், பணிக்கு வரும் நிரந்தர ஆசிரியர்களையும் தடுத்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஜாக்டோ – ஜியோ’ அமைப்பினர் கடந்த ஜன. 22ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் கல்விப் பணிகள் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளன. எனவே மாதம் ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் உத்தரவிட்டது.

இதை அடுத்து, தற்காலிக ஆசிரியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாக புகார்கள் கூறப்பட்டன. இந்நிலையில் இத்தகைய அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து, எச்சரிக்கை அனுப்பியுள்ளார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img