திருநங்கை திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்;மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு…!

therunangi marrug - 2026

மதுரை உயா்நீதிமன்றக் கிளை உத்தரவை தொடர்ந்து துாத்துக்குடியில் ஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி சங்கரபேரி பகுதியைச் சேர்ந்தவா் அருண்குமார் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜா என்ற திருநங்கையை காதலித்து கடந்த ஆண்டு துாத்துக்குடி சிவன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்த இவர்களின் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்காக துாத்துக்குடி சார்பதிவாளா் அலுவலகத்திற்கு சென்றனா்.

அப்போது தமிழக சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார்-ஸ்ரீஜாவின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது எனவும், ஆண் திருநங்கையின் திருமணத்தை பதிவு செய்வதற்கு வழிவகை இல்லாததால் உங்களுடைய திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என சார்பதிவாளர் கூறியதாக தெரிகிறது.

இதனை தொடா்ந்து அவர் பலகட்டங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இடத்தில் புகார் அளித்தார்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆகவே அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினர் தங்களின் திருமணத்தை பதிவு செய்து திருமணப் பதிவு சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடா்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீா்ப்பு கூறியது. அதில் அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமணப் பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும என்றும் கலப்பு திருமணத்திற்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதிகள் பெற தகுதியானவர்கள் என்று கூறியும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை தொடா்ந்து இன்று அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினா் துாத்துக்குடி சார்பதிவாளா் அலுவலகத்திற்கு வந்து தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்ய விண்ணப்பம் பூா்த்தி செய்து கொடுத்தனா், அதன் அடிப்படையில் அவர்களுக்கு திருமணப் பதிவு சான்று வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டது.
.
தமிழகத்திலேயே முதல்முறையாக ஆண்-திருநங்கையின் திருமணத்தை அரசு அங்கீகரித்து திருமணப் பதிவு சான்றிதழ் வழங்குவது இதுவே முதன்முறை, ஆகவே இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறினா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories