சூரியாஷ்டகம் Sri Suryashtakam

Published:

sun god surya bhagwan - 2026

ஸ்ரீ சூர்யாஷ்டகம்

ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||

(ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்)

ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|
ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(ஏழு (வானவில்லின் வண்ணம் போல் ஏழு) குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே… வெப்பம் நிறைந்தவரே… ரிஷி கச்யபரின் குமாரரே… வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே… அனைத்து உலகங்களுக்கும் தந்தையே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

ALSO READ:  "We are all one", this realization of oneness is attained in the Varg : Atul Limaye

(சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் என மூன்று குணங்களை உடையவரே… பலம் பொருந்திய மஹாசூரரே… ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)  

ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|
ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸ்ஸாகிய ஒளி கொண்டவரே… வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே… உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|
ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே… மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே… ஒரே சக்கரத்தைக் கொண்டவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே… தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே… எம் பாவம் அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

ALSO READ:  "We are all one", this realization of oneness is attained in the Varg : Atul Limaye

தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(உலகின் நாதனே… ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… ஹே சூரிய தேவனே… உம்மை வணங்குகிறேன்)

இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்

(இவ்வாறு சிவபெருமானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் நிறைவு பெறுகிறது)
——————————————————————————————-
கவிதை பாணியில் விளக்கம் தர முயன்றேன். ஆனால் சாதாரண நடையில் இதன் அர்த்தமே அழகாக அமைந்துவிட அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.  சில சம்ஸ்க்ருத பதங்களை பொருள் வரும் வகையில் பிரித்துத் தந்திருக்கிறேன். சாதாரணமாகப் படித்தாலே புரிந்துகொள்ளும் வகையில். 
கண்கண்ட தெய்வம் என போற்றும் சூரியபகவானைப் போற்றி அமைந்த இந்த அஷ்டகம் நல்லன எல்லாம் அருளும். மன நிம்மதி அளிக்கும். பலன் பெற இறையருள் துணை செய்யட்டும்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img