disclaimer

Published:

பொறுப்பாகாமை அறிவிப்பு:

தமிழ் தினசரி.காம் தளம் – தமிழ் இணையச் செய்தித் தளமாக, இணையத்துக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டுள்ளது. தினசரி என்ற பெயரிலான பழைய நாளிதழுக்கும் தமிழ் தினசரி.காம் தளத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. தமிழ் இணையச் செய்தித் தளமாக செய்திகளின் சுவை அறிந்த குழுவால் இந்தத் தளம் செயல்படுத்தப் படுகிறது.

தினசரி தளத்தில் வரும் தேசிய, உலகச் செய்திகள், தகவல்கள் ஏஜென்ஸி செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்படுபவை. உள்ளூர் செய்திகள், தகவல்கள் செய்திக் குழுவினரால் பெரிதும் சரிபார்க்கப்பட்டு, உண்மைத் தன்மையின் அடிப்படையிலேயே கூடுமானவரை வெளியிடப்படும்.

தளத்தில் வெளியாகும் படைப்புகள் கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு தினசரி தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது.

படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே உரியது.

தினசரி.காம் தளத்தில் வரும் பின்னூட்டங்களை ஓரளவு கட்டுப்படுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம். இருப்பினும், தனிநபரைத் தாக்காத, கேலியாகக் குறிப்பிடாத பின்னூட்டங்களை அப்படியே வெளியிட நினைக்கிறோம். அவ்வாறு குறிப்பிடப்படும்

பின்னூட்டங்களின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தினசரி தளம் பொறுப்பேற்காது.

எனவே வாசக அன்பர்கள், தங்களின் பொறுப்பு உணர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தினசரி.காம் தளத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img