KOLKATA BHARATHI TAMIL SANGAM AND SOUTH INDIA CLUB FUNCTION

Published:

sriram+speech+at+kolkata+south+india+club - 2026
sriram+kolkata+photo2 - 2026
sriram+kolkata+photo1 - 2026
sriram+and+vairamuthu3 - 2026
sriram+and+vairamuthu2 - 2026
sriram+and+vairamuthu2 - 2026
kolkata+south+india+club - 2026
kolkata+south+india+club+welcome+photo - 2026
kolkata+south+india+club+function1 - 2026
கோல்கத்தா சவுத் இந்தியா க்ளப் மற்றும் பாரதி தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய வரவேற்பு விழா!

கோல்கத்தாவில் இயங்கிவரும் பாரதிய பாஷா பரிஷத் என்ற உயரிய இலக்கிய அமைப்பு இந்த ஆண்டில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சாதனா சம்மான் என்ற விருதையும் அடியேனுக்கு யுவபுரஸ்கார் தேசிய இலக்கிய விருதையும் அளித்தது. அதற்காக சென்னையில் இருந்து கோல்கத்தா சென்ற எங்களுக்கு கோல்கத்தா சவுத் இந்தியா க்ளப்பும் பாரதி தமிழ்ச் சங்கமும் இணைந்து வரவேற்பு விழாவை நடத்தின. அருமையான நிகழ்ச்சி. கோல்கத்தா வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, மலையாளிகள் மற்றும் கன்னடர்களும் வந்திருந்தார்கள். குழந்தைகள் பூச்செண்டு கொடுத்து, பூத்தூவி வரவேற்றார்கள். கோல்கத்தாவில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் இருவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.
மறுநாள் 18.04.09 அன்று கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஒரிய எழுத்தாளர் ரமாகாந்த் ரத் அடியேனுக்கு பரிசு வழங்கினார். அடுத்து அடியேன் பேசினேன். அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இங்கே…

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img