முகத்திரை விலக்கி உன் மேனியின் துகில் கலைக்கிறேன்.நீ துயில் கலைந்து ஒளிர்ந்தாய். உன் மெல்லிய மேனியில்என் கை விரல்கள் கோலம் போட…என் ரகசியங்களைஎனக்கே தெரிய வைத்தாயோ? என் பார்வை எப்போதும் உன் மீதடி…உன் வசீகரிக்கும் ஒளியால்என் கண்ணொளி காணாமல் போகுதடி என் கண்மணியே…. என் மனம் எப்போதும் உன் குரலுக்காக ஏங்கிக் கிடக்குது பார்…மௌனத்தின் வலியை நீ அறியாயோ?பார்…வதைகின்றாய் என்னை..! மின்சாரத் தழுவல் …சூடேற்றும் சேமிப்புக்கலன்…நினைவலைகள் உன்னாலேநெஞ்சத்தில் மோதுதடி.. விரல்கள் பரபரத்துஉன் மேனியில் உரசிப் பார்க்க…விளங்காத உலகத்தைவிளக்குகிறாய்……
Leave a Reply