கொள்ளலும் கொடுத்தலும்எள்ளலும் ஏந்தலும்அன்புடையோர் இலக்கணம்! “என்னைக் கொள்” என் அன்பே…! பல முறை பகன்றாலும்பலன் மட்டும் இல்லவே இல்லை! உதடுகள் ஒட்டாத தன்மைஉயிரோட்டம் இல்லாத வெறுமை!நாவுக்கும் உதட்டுக்குமேஒட்டுறவு இல்லையே! என்னால் மனத்தில்நிறுத்த முடியாது – என்னை! என்னாள் மனத்தில்புகுத்த முடியாது – தமிழை! என்னாழ் மனத்தில்விலக்க முடியாது – அவளை! ல-வுக்கும் ள-வுக்கும்வேறுபாடி காட்டின்லவ்வுக்கும் ளவ்வுக்கும்போகும் எண்ணம்! அட…‘என்னைக் கொள்’ என் அன்பே! நாள்கள் நகர்ந்தாலும்நால்கல் மாறவில்லை! ல் என்றே இயம்பிஎன்னை இல்லாமல் ஆக்குகிறாள்… கொன்று தின்னும்…
Leave a Reply