December 6, 2025, 10:57 AM
26.8 C
Chennai

ராஜபாளையம்-288 பதுக்கல் சமையல் எரிவாயு சிலிண்டர் பறிமுதல்..

IMG 20230322 WA0093 - 2025
ராஜபாளையம் அருகே அரசியார் பட்டி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை காணலாம்.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பாதுகாப்பாக குடோனில் வைப்பதற்கு பெட்ரோலியத் துறை உள்ளிட்ட நான்கு வகையான துறைகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.குறிப்பாக சிலிண்டர்களை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கு தனிப்பட்ட குடோன்களை அமைக்க வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளது.இதனை பின்பற்றாத ஒரு சிலர் மாநிலம் முழுவதும் முறைகேடாக சிலிண்டர்களை பதுக்கி வைத்து வினியோகம் செய்து வந்துள்ளனர்.

அதன் அடிப்படையில் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வழியாக வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படும் சுமார் 288 இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கடத்திவரப்பட்டு ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் உள்ள அரசியார்பட்டியில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி எந்த விதமான அறிவுரைகளும் பின்பற்றாமல் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சிலிண்டர்களை பறிமுதல் செய்து குடோனின் உரிமையாளர் மலைக்கனி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலிண்டர்களும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories