‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் பெற்ற ஓபிஎஸ்!

ops 2 - 2026

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில் சிறப்புப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

அரசுமுறை பயணமாக, அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று (நவ.12) நெபர்வல்லியில் உள்ள மூத்த குடிமகன்களுக்கான ‘மெட்ரோபாலிட்டன் ஏசியா ஃபேமிலி சர்வீசஸ்’ மையத்தின் சார்பில், காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் வழங்கப்பட்டது.

பதக்கத்தினை வழங்கிய 86 வயதான பிரதாப்சிங், துணை முதல்வர் மற்றும் தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமாருக்கு காந்தி சக்ரா மற்றும் பாக்கெட் கடிகாரத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வின் போது தமிழக நிதித் துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன், உலகத் தமிழ் இளைஞர் பேரவை தலைவர் விஜய பிரபாகர், மெட்ரோபாலிட்டன் ஏசியா ஃபேமிலி சர்வீசஸ் மையத்தின் நிறுவனர் சந்தோஷ்குமார் மற்றும் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதனிடையே இன்று சிகாகோ நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் உரையாற்றினார்.

அமெரிக்க பல இன கூட்டமைப்பு சார்பில் ‘உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது-2019’ வழங்கும் விழா சிகாகோவில் நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் – ஆசியா’ விருது வழங்கப்பட்டது. நேற்று முன் தினம் சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் ‘தங்கத் தமிழ் மகன்’ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories