பள்ளிப் பாடத்திலும் இடம் பிடிக்கிறது கொரோனா!

coronavirus 1
coronavirus 1

உலக மக்களை நீங்கா துயரத்தி்ல் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று பற்றிய பாடம் விரைவில் பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழகப் பள்ளிக் கல்வியும், மத்தியக் கல்வி வாரியமும் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ள கொரோனா எனும் நோய்த்தொற்று இதுவரை மனித சமுதாயம் கண்டிராத கொடுமையாகும். இதற்காக கொரோனாவை எல்லோரும் கொரோனா கொடூரன் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

உலகில் 300-க்கும் மேற்பட்ட நாடுகளில் 40 லட்சம் பேரை பீடித்துள்ள இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2.67 லட்சம் பேர் இறந்துள்ளனர். உலகப் போரில் கூட இவ்வளவு பேர் இறந்ததில்லை. மேலும் கொரோனாவையும் இந்த சமூகத்தையும் பிரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

இதேபோல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலும், பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கும் இனி கொரோனா கல்வி உதவும் என்றே எதிர்பார்க்கலாம்.

கொரோனாவுடன்தான் இனி வாழ வேண்டும் என்பதால், அதன் தாக்கம் குறித்து எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கழகம் வரை அனைத்துப் பாடத் திட்டத்திலும் இந்த ஆண்டே சேர்ப்பதற்கு கல்வியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழகத்தைப் பொறுத்தவரை, பள்ளி்க் கல்வித் திட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்திலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை அறிவியல் பாடத்திலும் கொரோனா வைரஸ் பற்றிய பாடம் இடம் பெறவுள்ளது.

corona kolam
corona kolam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், கொரோனா வைரஸ் பாடம் இடம் பெறும். நுண் உயிரியல்,ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பதப்படுத்துதல், நுண் வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், கொரோனா பாடங்கள் இணைக்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸின் தொடக்கம், அதன் வடிவம், அதில் இடம்பெற்றுள்ள புரத செல்களின் தன்மை, மிருகங்களிடம் பரவிய வைரஸ், மனிதனுக்கு பரவிய முறை, அதனால் ஏற்படும் பாதிப்பு போன்ற அம்சங்கள், பாடங்களில் இடம்பெறும். இதற்காக, உயிரியல் பிரிவு ஆசிரியர்கள், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களைத் திரட்டி வருவதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலும், பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கும் இனி கொரோனா கல்வி உதவும் என்றே எதிர்பார்க்கலாம்.

  • சதானந்தன், சென்னை
ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories