பள்ளிப் பாடத்திலும் இடம் பிடிக்கிறது கொரோனா!

coronavirus 1
coronavirus 1

உலக மக்களை நீங்கா துயரத்தி்ல் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று பற்றிய பாடம் விரைவில் பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழகப் பள்ளிக் கல்வியும், மத்தியக் கல்வி வாரியமும் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ள கொரோனா எனும் நோய்த்தொற்று இதுவரை மனித சமுதாயம் கண்டிராத கொடுமையாகும். இதற்காக கொரோனாவை எல்லோரும் கொரோனா கொடூரன் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

உலகில் 300-க்கும் மேற்பட்ட நாடுகளில் 40 லட்சம் பேரை பீடித்துள்ள இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2.67 லட்சம் பேர் இறந்துள்ளனர். உலகப் போரில் கூட இவ்வளவு பேர் இறந்ததில்லை. மேலும் கொரோனாவையும் இந்த சமூகத்தையும் பிரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

இதேபோல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலும், பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கும் இனி கொரோனா கல்வி உதவும் என்றே எதிர்பார்க்கலாம்.

கொரோனாவுடன்தான் இனி வாழ வேண்டும் என்பதால், அதன் தாக்கம் குறித்து எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கழகம் வரை அனைத்துப் பாடத் திட்டத்திலும் இந்த ஆண்டே சேர்ப்பதற்கு கல்வியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பள்ளி்க் கல்வித் திட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்திலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை அறிவியல் பாடத்திலும் கொரோனா வைரஸ் பற்றிய பாடம் இடம் பெறவுள்ளது.

corona kolam
corona kolam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், கொரோனா வைரஸ் பாடம் இடம் பெறும். நுண் உயிரியல்,ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பதப்படுத்துதல், நுண் வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், கொரோனா பாடங்கள் இணைக்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸின் தொடக்கம், அதன் வடிவம், அதில் இடம்பெற்றுள்ள புரத செல்களின் தன்மை, மிருகங்களிடம் பரவிய வைரஸ், மனிதனுக்கு பரவிய முறை, அதனால் ஏற்படும் பாதிப்பு போன்ற அம்சங்கள், பாடங்களில் இடம்பெறும். இதற்காக, உயிரியல் பிரிவு ஆசிரியர்கள், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களைத் திரட்டி வருவதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலும், பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கும் இனி கொரோனா கல்வி உதவும் என்றே எதிர்பார்க்கலாம்.

  • சதானந்தன், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories