5 வருசம் ஆனாலும்… கொடுத்த வாக்குறுதியை திமுக.,வால் நிறைவேத்தவே முடியாது..!

dr krishnasamy
dr krishnasamy

5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்தாலும் திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.! என்று கூறினார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி..

விருதுநகரில் செய்தியாளா்களிடம் அவர் கூறியதாவது:

ஹலோபுதிய தமிழகம் கட்சி சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்துக்கள் எழுச்சி மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி 2022 மாா்ச் 9 இல் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளி விழா சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்திய அளவில் உள்ள ஆன்மிக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியா எண்ணிக்கையில் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும் கூட குறிப்பாக தமிழகத்தில் இந்துக்கள் என்று சொல்வதற்கே இந்துக்கள் கூச்சப்படுகின்றனர். இந்த சூழலை மாற்றி அமைத்து இந்துக்கள் என தலைநிமிர்ந்து சொல்ல வேண்டும். அதன் மூலம் இந்திய தேசத்தின் அடையாளம் பிரதிபலிக்கப்பட வேண்டும்.

இந்துக்கள் ஏற்றத்தாழ்வின்றி சமூக நல்லிணக்கம், சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதே இம்மாநாட்டின் நோக்கம். இதன் மூலம் இந்திய தேசத்தை அடையாளப்படுத்த முடியும். ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்மொழி பேசுவோரை ஒரே சமுதாயமாக ஒன்றிணைக்கவில்லை. அதற்கு அரசியல் ரீதியாக சமுதாயத்தை பிளவுபடுத்தியதே காரணம்.

தீபாவளி பண்டிகை நேரத்தில் மட்டும் பட்டாசு மாசு பிரச்னை உருவெடுக்கிறது. இதை முன்னரே சரி செய்ய பட்டாசு உற்பத்தியாளா்கள், மாநில அரசு முன்வர வேண்டும். அருப்புக்கோட்டை அருகே சட்டவிரோதமாக இயங்கும் தென்பாலை குவாரியால் குடியிருப்புகள் சேதம் அடைவதுடன், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை சமூக பிரச்னையாகத் தான் பாா்க்க வேண்டும். இப்பிரச்னை மட்டுமல்ல பல்வேறு சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளுக்கு மதுபான கடைகளே காரணமாக உள்ளன. அனைத்து மதுபானக் கடைகளையும் மூடினால் மட்டுமே குற்ற சம்பவங்கள் குறையும். மேலும் தமிழகமும் முன்னேற்றமடையும். 5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்தாலும் திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது…என்று, டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories