காஞ்சியில் ஒரு கொடையாளியாய் வாழ்ந்த குஜராத்தி கங்காபாய்!

kanchipuram gangabai madanp - 2026

காஞ்சியில் சாலைத்தெருவில் இரு நூற்றாண்டுகள் பழைமையான ஒரு சத்திரம் இருக்கிறது. அதன் பெயர் கங்காபாய் சத்திரம்.

யார் இந்த கங்காபாய்? இவர் எப்படி காஞ்சிக்கு வந்தார்?! காஞ்சிக்கு வந்தவர் என்ன செய்தார்? எல்லாம் ஆச்சரியமானவை!

முந்தைய காலத்தில், இருக்கும் செல்வத்தை கோயில்களை மையமாக வைத்து, அவற்றின் வழியே ஏழைகளுக்குக் கொடுத்த செல்வந்தர்கள் பலர். அப்படி ஒருவர் கங்காபாய்.

குஜராத்தில் மிகப்பெரிய நகை வியாபாரியின் முதல் மனைவி கங்காபாய். இவர்களுக்கு வாரிசு எதுவும் இல்லை. இதனால் இறைத் தொண்டு ஆற்ற விரும்பி அதிலேயே ஈடுபட்டார் கங்காபாய். பின்னாளில் தன் கணவர் மறைவுக்குப் பிறகு தன் பங்கு செல்வத்தை எடுத்துக் கொண்டு, தெற்கே வந்தார்.

அறநெறியும் ஆலயங்களும் தர்மமும் தழைத்த தெற்குப் பக்கம் பெரும் செல்வ வளத்துடன் வந்தார். வரும் வழியில் மைசூரில் தங்க எண்ணினார். ஆனால் அப்போது திப்பு சுல்தானின் கடைசிப் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. எனவே அங்கிருந்தும் நகர்ந்து காஞ்சிபுரத்தின் பக்கம் வந்தார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அவருக்கு ஆற்காட்டில் 3000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. சென்னையிலும் இன்றைய சத்யமூர்த்தி பவன் இருக்கும் இடமும்கூட இந்த அம்மையாரின் இடம்தான் என்பார்கள்!

பின்னர் காஞ்சியில் அறப்பணிகள் பல செய்தார். காஞ்சியில் இந்த சத்திரத்தையும் அருகே சிற்பிகளைக் கொண்டு இரு கல்மண்டபங்களையும் எடுப்பித்தார்.

அந்த நாளில் கச்சி ஏகம்பத்திற்கும் வரதராசப் பெருமானுக்கும் மூன்று லட்சம் ரூபாய் கொடையளித்ததால் பிரம்மோத்ஸவத்தில் ஐந்தாம் நாள் இருவரும் மண்டபங்களில் எழுந்தருள வகை செய்தாள். இது இன்றும் நிகழ்கிறது.

பிரம்மோத்ஸவத்தில் அனைவருக்கும் உணவளித்தாள். ஐம்பதாண்டுகள் முன்பு வரை முழங்கை நெய் வழிய உணவு இட்ட செயலை ஊரார் இன்றும் கூறக் கேட்கலாம்.
இன்று…

அறநெறி பாழ்பட்ட தமிழ் மண்ணில் அனாதையாய் நிற்கிறது இந்தச் சத்திரம். அறம் நிலையாத் துறையின் கவனமின்மையாலும், அற நெறிகளில் எள்ளளவும் எண்ணமில்லா மக்களாலும் வைக்கோல் சுமந்து, சாணி அடித்து, குப்பைக் கிடங்காகி… பொலிவிழந்து கிடக்கின்றன இந்த மண்டபங்கள்!

அறநெறி உந்தித்தள்ள அனைத்தையும் அளித்த கங்காபாயி அம்மையின் பளிங்குக்கல் வடிவம் unveiled by lord varadaraja என்ற தகவலுடன் ஏதோ… இன்னமும் நின்றுகொண்டிருக்கிறது.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

– ஜி.சங்கரநாராயணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories