ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

ipl 2026 season - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபத்தியோராவது ஆட்டம் ஹைதராபாத் vs ராஜஸ்தான் – ஹைதராபாத் – ஏப்ரல் 13

          முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 216 ரன் எடுத்தது. அந்த அணியின் அணித்தலைவர் இஷான் கிஷன் 91 ரன் (44 பந்துகள், 8 ஃபோர், 6 சிக்சர்) எடுத்தார். ஹென்றி கிளாசன் (26 பந்துகளில் 40 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (13 பந்துகளில் 28 ரன்), சலீல் அரோரா (13 பந்துகளில் 24 ரன்), ட்ராவிஸ் ஹெட் (18 பந்துகளில் 18 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்கம் மிக மிக மோசமாக இருந்தது. யசஸ்வீ ஜெய்ஸ்வால் (1 ரன்), வைபவ் சூர்ய வன்ஷி (பூஜ்யம்), துருவ் ஜுரல் (பூஜ்யம்), பிரிட்டோரியஸ் (பூஜ்யம் ரன்), ரியன் பராக் (4 ரன்) ஆகிய ஐவரும் பெரிதாக எதுவும் செய்யாமல் ஆட்டமிழந்தார்கள். மூன்று ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 ரன்னுக்கு 5 விக்கட்டுகள் இழந்திருந்தது. அதன் பின்னர் ரவீந்தர் ஜதேஜா (32 பந்துகளில் 45 ரன்), டொனாவன் ஃபெரேரா (44 பந்துகளில் 69 ரன்), துஷார் தேஷ்பாண்டே (11 பந்துகளில் 25 ரன்) அடித்ததால் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 159 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஓவரில் மூன்று விக்கட்டுகள் எடுத்த ப்ரஃபுல் ஹிங்கே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இருபத்தியிரண்டாவது ஆட்டம் சென்னை vs கொல்கொத்தா – சென்னை – ஏப்ரல் 14

          இந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு இரண்டாவது வெற்றி கிடைத்தது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் 48 (32 பந்துகள் 4 ஃபோர், 3 சிக்சர்) ரன்னும் ஆயுஷ் மாத்ரே 38 (17 பந்துகள், 6 ஃபோர், 2 சிக்சர்) ரன்னும் டிவால்ட் ப்ருவிஸ் 41 (29 பந்துகள், 4 ஃபோர், 2 சிக்சர்) ரன்னும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய கொல்கொத்தா அணி தனது பேட்டிங் லைனப்பில் மாற்றம் செய்தது. தொடக்க வீரர்களாக ஃபின் ஆலனும் சுனில் நரேனும் இறங்கினர். ஆனால் ஃபின் ஆலன் (1 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். அதனால் ஏறத்தாழ தொடக்க வீரராக அஜிங்க்யா ரஹானே இறங்க வேண்டியதாயிற்று. ஆனால் கொல்கொத்தா வீரர்களால் அதிரடியாக ஆடமுடியவில்லை. அந்த அணியின் சுனில் நரேன் (24 ரன்), அஜிங்க்யா ரஹானே (28 ரன்), ரகுவன்ஷி (27 ரன்), ரொவ்மென் போவெல் ஆட்டமிழக்காமல் (31 ரன்), ரமன்தீப் சிங் (35 ரன்) ஆகியோர் மட்டும் சுமாராக ஆடினர். இதனால் கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 160 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் நூர் அகமது 3 விக்கட்டுகள் எடுத்தார். அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இருபத்திமூன்றாவது ஆட்டம் லக்னோ vs பெங்களூரு – பெங்களூரு – ஏப்ரல் 15

          முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடக்கம் முதலே சரியாக விளையாடவில்லை. அந்த அணியின் மிட்சல் மார்ஷ் (32 பந்துகளில் 40 ரன்), ஆயுஷ் பதோனி (24 பந்துகளில் 38 ரன்), முகுல் சௌத்ரி (28 பந்துகளில் 39 ரன்) ஆகிய மூவர் மட்டுமே சற்று நிலைத்து ஆடினர். பிற வீரர்கள் வந்தார்கள் போனார்கள் ரகம். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 146 ரன் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் ரசிக் சலாம் 4 விக்கட்டுகளும் புவனேஷ் குமார் 3 விக்கட்டுகளையும் க்ருணால் பாண்ட்யா 2 விக்கட்டுகளையும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய பெங்களூரு அணி இந்த ஸ்கோரை 15.1 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 149 ரன் எடுத்து விரைவில் அடைந்தது. அந்த அணியின் விராட் கோலி (49 ரன்), ரஜத் படிதார் (27 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (23 ரன்) சிறப்பாக ஆடினர். ஜேசன் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இருபத்திநான்காவது ஆட்டம் மும்பை vs பஞ்சாப் – மும்பை வான்கடே மைதானம் – ஏப்ரல் 16

          முதலில் ஆடிய மும்பை அணியின் இன்று ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக க்விண்டன் டி காக் ஆடினார். இது அவரது இந்த சீசனின் முதல் ஆட்டம். முதல் ஆட்டத்திலேயே ஆட்டமிழக்காமல் அவர் சதம் அடித்தார். 60 பந்துகளில் 112 ரன், 8 ஃபோர், 7 சிக்சர். நமன் தீர் 50 ரன் அடித்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியில் அர்ஷதீப் சிங் 3 விக்கட்டுகள் எடுத்தார். இரண்டாவதாக விளையாடிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 80 ரன்னும் ஷ்ரேயாஸ் ஐயர் 66 ரன்னும் எடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 198 ரன் எடுத்து வெற்றிபெற்றது. அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம். டெல்லி 5ஆம் இடம். குஜராத் 6ஆம் இடம். லக்னோ 7ஆம் இடம். சென்னை 8ஆம் இடம். மும்பை 9ஆம் இடம். கொகொத்தா 10ஆம் இடம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Entertainment News

Popular Categories