December 5, 2025, 7:03 PM
26.7 C
Chennai

எட்டு மாதமாய் நீர்கட்டிக்கு கர்ப்பமென மருத்துவர்கள் சிகிச்சை! அதிர்ந்த குடும்பத்தினர்!

aswini - 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வயிற்றிலிருந்த நீர்கட்டியை குழந்தை எனக்கூறி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்து பெருமாள் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை. எட்டு மாதத்திற்கு முன்பு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அஸ்வினியும் அவரது குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 8 மாதங்களாக மருந்து டானிக் என சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை அளித்து வந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தைக்கு தேவையான சக்தி கிடைக்க சத்து மாத்திரைகள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என அறிவுரையும் கூறியுள்ளனர்.
திடீரென அஸ்வினிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .

இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பார்த்தபோது அவர்கள் ஸ்கேன் செய்வதற்காக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது அவரது வயிற்றில் இருந்தது குழந்தை இல்லை நீர்க்கட்டி என்பதை உறுதி செய்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அஸ்வினி உடனே தனது குடும்பத்தாரிடம் இந்த செய்தியை தெரிவிக்க ஆத்திரமடைந்த அவரது கணவர் அஸ்வினியை வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் ஒன்று திரண்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவன குறைபாட்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார அலுவலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories