December 6, 2025, 2:11 AM
26 C
Chennai

வாட்ஸ்அப்பில் குரூப் காலிங் செய்வதை எளிமையாக்க புதிய வசதி அறிமுகமாகிறது!

13 May17 Whatsapp - 2025

சாதாரண மனிதன் தொடங்கி தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி வாட்சப் தான்.

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் ஏதாவதொரு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. மட்டுமன்றி ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள சேவைகளில் உள்ள குறைகளை சரி செய்து வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற மாற்றங்களை செய்து வருகிறது.

தற்போது வாட்ஸ்அப் குரூப் காலிங் செய்வதில் உள்ள ஒரு சில குறைகளை சரி செய்து அடுத்த வெர்ஷனில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது வாட்சப்.

இந்த வசதியானது ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு கடந்த மாதமே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஆன்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கு இந்த வசதியானது வாட்ஸ்அப்பின் வெர்ஷன் (v2.19.9) -ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்பொழுது சோதனை முயற்சியாக வாட்ஸ்அப் பீட்டா பயன்பாட்டாளர் களுக்கு மட்டும் இந்த புதிய வசதி உபயோகத்தில் உள்ளது. மற்ற பயன்பாட்டாளர்களுக்கு விரைவில் இந்த வசதி அடங்கிய வெர்ஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்.

அப்படி என்ன வசதி இது? அடிக்கடி வாட்சப் குரூப் காலிங் செய்பவர்களுக்கு இதனைப் பற்றி நன்கு தெரியும்.

தற்பொழுது இருக்கும் வாட்ஸ்ஆப் வெர்ஷனில் குரூப் காலிங் செய்வதற்கு முதலில் ஒரு நபருக்கு கால் செய்ய வேண்டும். பிறகு மேலிருக்கும் add பட்டனை கிளிக் செய்து பிறகு அடுத்த நபருக்கு கால் செய்யவேண்டும். இதேபோல் எத்தனை பேருக்கு கால் செய்ய வேண்டுமோ அத்தனை முறை அந்த பட்டனை அழுத்தி அவரை குரூப் கால்லிங்கில் இணைக்க வேண்டும்.

இந்த சிரமத்தினை போக்குவதற்காக வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் நாம் எத்தனை பேருடன் குரூப் காலிங் பேச வேண்டுமோ அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தேர்வு செய்து அனைவருக்கும் ஒரே நேரத்தில் கால் செய்ய முடியும். இதனால் ஒருமுறை நாம் கால் பட்டனை அழுத்தினால் போதும்.

இப்படி குரூப் காலிங் செய்வதற்காக வாட்ஸ் அப்பில் புதிய பட்டன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் அடையாளத்துடன் இருக்கும் அந்த கால் பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களது காண்டாக்டில் உள்ள அனைவரின் பெயர்களும் காட்டப்படும். அதில் யார் யாருக்கு குரூப் காலிங் செய்ய வேண்டுமோ அவர்களை தேர்வு செய்தபின் அங்கு காண்பிக்கப்படும் வீடியோ அல்லது வாய்ஸ் கால் பட்டனை அழுத்திய பின் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கால் அனுப்பப்படும். பிறகு அவர்கள் இணைந்தவுடன் குரூப் காலிங் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories