சுபாஷிதம்: ஒவ்வொரு கணமும் தனமே!

subhashitam_107
subhashitam_107

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!
108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

108. ஒவ்வொரு கணமும் தனமே! 

ஸ்லோகம்:

க்ஷணஸ: கணசஸ்சைவ வித்யாமர்தம் ச சாதயேத் |
க்ஷணத்யாகே குதோ வித்யா கணத்யாகே குதோ தனம் ||
– ஹிதோபதேசம்.

பொருள்:

கல்வி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு கணமும் மதிப்பு வாய்ந்தது என்று அறிய வேண்டும். பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் ஒவ்வொரு பைசாவும் மதிப்பு வாய்ந்ததாக கொண்டு வீண் செலவு செய்யாமல் சேமிக்கவேண்டும். ஒரு கண நேரம்தானே என்று வீணடித்தால் படிப்பு எப்படி வரும்? ஒரு பைசாதானே என்று வீண் செலவு செய்தால் பணம் எப்படித் தங்கும்? 

விளக்கம்:

வீணடித்த காலம் திரும்ப வராது. ஒரு காசைக் கூட வீணாகத் தொலைக்கக் கூடாது. கிரிக்கெட், சாட்டிங் என்று காலத்தைப் போக்கும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் சுலோகம் இது.

நேரத்தையும் பணத்தையும் பொருட்படுத்தாத மனநிலையை எச்சரிக்கும் ஸ்லோகம் இது. நேரத்தையும் செல்வத்தையும் மதிப்பை அறிந்து பாதுகாக்க வேண்டும் என்று போதிக்கிறது இந்த ஸ்லோகம்.

பல துளி பெருவெள்ளம் என்ற பழமொழியைப் போல அட்சர அட்சரமாகச் சேர்ந்து அட்சயமாக ஞானம் மலர்கிறது. பைசா  பைசாவாகச் சேர்ந்து பெருஞ்செல்வம் சேர்கிறது.

ஒலிம்பிக் ஓட்டப் பந்தயங்களில் பங்கு பெறுபவர்களுக்கு விநாடியின் மதிப்பு தெரியும். நிரந்தரம் சுழன்று கொண்டிருக்கும் பூமித்தாய்க்கு நானோ செகண்ட் மதிப்பு தெரியும்.

மொபைல் போனைக் கையில் பிடித்து மணிக்கணக்காக பொழுதுபோக்கும் மாணவர்களை எச்சரிக்கை செய்கிறது இந்த ஸ்லோகம்.

அனாவசிய செலவுகளைக் குறைத்து செல்வம் சேர்! தானம் செய்! வீண் பொழுது போக்காமல் ஞானம் பெறும் வழியைப் பார்! பிறருக்கு பகிர்! என்பது ரிஷிகளின் உத்தரவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories