சுபாஷிதம்: ஒவ்வொரு கணமும் தனமே!

subhashitam_107
subhashitam_107

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!
108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

108. ஒவ்வொரு கணமும் தனமே! 

ஸ்லோகம்:

க்ஷணஸ: கணசஸ்சைவ வித்யாமர்தம் ச சாதயேத் |
க்ஷணத்யாகே குதோ வித்யா கணத்யாகே குதோ தனம் ||
– ஹிதோபதேசம்.

பொருள்:

கல்வி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு கணமும் மதிப்பு வாய்ந்தது என்று அறிய வேண்டும். பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் ஒவ்வொரு பைசாவும் மதிப்பு வாய்ந்ததாக கொண்டு வீண் செலவு செய்யாமல் சேமிக்கவேண்டும். ஒரு கண நேரம்தானே என்று வீணடித்தால் படிப்பு எப்படி வரும்? ஒரு பைசாதானே என்று வீண் செலவு செய்தால் பணம் எப்படித் தங்கும்? 

விளக்கம்:

வீணடித்த காலம் திரும்ப வராது. ஒரு காசைக் கூட வீணாகத் தொலைக்கக் கூடாது. கிரிக்கெட், சாட்டிங் என்று காலத்தைப் போக்கும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் சுலோகம் இது.

நேரத்தையும் பணத்தையும் பொருட்படுத்தாத மனநிலையை எச்சரிக்கும் ஸ்லோகம் இது. நேரத்தையும் செல்வத்தையும் மதிப்பை அறிந்து பாதுகாக்க வேண்டும் என்று போதிக்கிறது இந்த ஸ்லோகம்.

பல துளி பெருவெள்ளம் என்ற பழமொழியைப் போல அட்சர அட்சரமாகச் சேர்ந்து அட்சயமாக ஞானம் மலர்கிறது. பைசா  பைசாவாகச் சேர்ந்து பெருஞ்செல்வம் சேர்கிறது.

ஒலிம்பிக் ஓட்டப் பந்தயங்களில் பங்கு பெறுபவர்களுக்கு விநாடியின் மதிப்பு தெரியும். நிரந்தரம் சுழன்று கொண்டிருக்கும் பூமித்தாய்க்கு நானோ செகண்ட் மதிப்பு தெரியும்.

மொபைல் போனைக் கையில் பிடித்து மணிக்கணக்காக பொழுதுபோக்கும் மாணவர்களை எச்சரிக்கை செய்கிறது இந்த ஸ்லோகம்.

அனாவசிய செலவுகளைக் குறைத்து செல்வம் சேர்! தானம் செய்! வீண் பொழுது போக்காமல் ஞானம் பெறும் வழியைப் பார்! பிறருக்கு பகிர்! என்பது ரிஷிகளின் உத்தரவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories