தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

anaimangalam seppedu returned to india by modiji - 2026

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

நமது சோழப் பேரரசின் மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமான ஆனைமங்கலம் செப்பேடுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நமது தாயகத்திற்குத் திரும்பியுள்ளன.

1976 முதல் 2013 வரை வெளிநாடுகளில் இருந்து வெறும் 13 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன. ஆனால், நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 228-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மற்றும் நமது பழங்காலப் பொக்கிஷங்கள் மீட்கப்பட்டுப் பத்திரமாகத் தாய்மண்ணிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வரலாற்றுச் சாதனையின் உச்சமாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்தச் செப்பேடுகள் முறைப்படி நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நமது தொன்மையை மீட்டெடுப்பதில் இந்திய அரசு காட்டும் ஈடுபாட்டிற்கு இதுவே மிகப்பெரிய சான்று.

இந்தச் செப்பேடுகள் நெதர்லாந்துக்கு எப்படிச் சென்றன என்பது பலருக்கும் தெரியாத ஒரு வலிமிகுந்த வரலாறு. நமது நிலத்தின் சில பகுதிகளை டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில், இந்த விலைமதிப்பற்ற செப்பேடுகள் நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டு நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதனாலேயே இது லைடன் செப்பேடுகள் என்று அழைக்கப்படுகிறது.

இந்தச் செப்பேடுகள் வெறும் உலோகத் தகடுகள் அல்ல; தமிழர்களின் ஈடு இணையற்ற கலைத்திறன், அறிவியல் அறிவு, துல்லியமான நில அளவை முறைகள் மற்றும் செம்மையான ஆட்சி நிர்வாகத்தின் உயிரோட்டமான ஆவணம்.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

இதில் நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு வரலாற்று உண்மை உள்ளது. மாமன்னர்கள் ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் தீவிரமான சிவபக்தர்கள். சைவம் தழைக்கப் பல பிரம்மாண்டமான சிவாலயங்களை எழுப்பியவர்கள். அன்றைய ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் (இன்றைய இந்தோனேசியா) மன்னர் மாரவிஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை என்ற புத்த விகாரத்தை அமைக்க உதவிகோரினார்.

ஒரு தீவிர சிவபக்தராக இருந்தபோதிலும், பௌத்த மத விகாரைக்கு ஆனைமங்கலம் கிராமத்தை முழுமையாக மானியமாக வழங்கி மாமன்னர் ராஜராஜ சோழன் ஆதரவளித்தார். இது சோழர்களின் அளப்பரிய மத நல்லிணக்கத்தையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மையையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது. இந்த மானிய விவரங்களை அவரது மகன், மாமன்னர் ராஜேந்திர சோழன் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் செப்பேடுகளாகப் பொறித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகள் இன்று மீண்டும் நம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு நெடிய சட்டப் போராட்டம் உள்ளது. வழக்கறிஞர் திரு.பி.ஜெகநாத் அவர்கள் 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், அதனைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறையும், வெளியுறவுத்துறையும் இணைந்து மேற்கொண்ட தொடர்ச்சியான ராஜதந்திர நகர்வுகளுமே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

திரு.பி.ஜெகநாத் அவர்களின் பயணம் இதோடு முடிந்துவிடவில்லை. ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சு மிஷனரிகளால் இடிக்கப்பட்ட சூடாமணி விகாரையின் கோபுரத்தை, மீட்கப்பட்ட இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் குறிப்புகளைக் கொண்டு அதே நாகப்பட்டினத்தில் மீண்டும் கட்டமைக்க வேண்டும் எனத் தனது அடுத்தகட்ட சட்டப் போராட்டத்தை அவர் தற்போது துவங்கியுள்ளார். அவரது இந்த முயற்சிக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

நமது பண்பாட்டின் ஆணிவேரான இந்தச் செப்பேடுகள் மீட்கப்பட்டிருப்பது, தமிழ் கலாச்சாரத்திற்கும் வரலாற்றுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை. நமது வரலாற்றை மீட்டெடுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், இந்தப் பணிக்காக அயராது உழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது பெருமைமிக்க வரலாற்றை மீட்டெடுப்போம்! வருங்கால சந்ததிக்குச் சோழர்களின் புகழைக் கொண்டு சேர்ப்போம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories