January 18, 2025, 6:10 AM
23.7 C
Chennai

ஆப்கானிஸ்தானில் அப்பாவி பஸ் பயணிகள் 13 பேர் சுட்டுக் கொலை

காபுல்: தெற்கு ஆப்கானிஸ்தானில் பஸ் பயணிகள் 13 பேரை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை இன்று காலை சுட்டுக் கொன்றனர். நாட்டின் அப்பாவி மக்களைக் குறிபார்த்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் காபூலுக்கு அருகே வார்தாக் மாகாணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் இந்தத் தாக்குதல் காபூலுக்கு அருகிலேயே நடந்துள்ளது, அதன் பாதுகாப்பு குறித்த கவலையினை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2016க்குள் ஆப்கனில் உள்ள 10 ஆயிரம் அமெரிக்க ராணுவத் துருப்புகளை திருப்பி அனுப்பும் முயற்சியில் முட்டுக்கட்டை போடுவதாக இது அமையக்கூடும் என்று கருதப் படுகிறது. இருப்பினும் இந்த வருட டிசம்பருக்குள் 10 ஆயிரம் துருப்புகளை 5,500ஆகக் குறைக்க அமெரிக்கா முயற்சி எடுத்துள்ளது. இதுகுறித்து வார்தாக் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அடாவுல்லா கோக்யானி கூறியபோது, காந்தஹார் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் மீது அதிகாலை 1 மணியளவில் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு பெண் உள்பட 13 பேர் உயிரிழந்தனர் என்றார். கஜினி மாகாண துணை ஆளுநரோ, பஸ்ஸில் இருந்து பயணிகளை கீழே இறக்கிவிட்டு, அவர்களை ஒவ்வொருவராக பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  வங்கதேசத்தில் இஸ்கான் செயலர் கிருஷ்ணதாஸ் கைது; இந்தியாவில் வலுக்கும் கண்டனங்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை