ஆண்பிள்ளைகளை சரியாக வளருங்கள்: பெற்றோர்களுக்கு பிரபல நடிகை அறிவுரை

Published:

adah sharma1 - 2026கடந்த சில நாட்களாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசி வரும் நிலையில் பிரபல நடிகை அடாசர்மா, நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விஷயம் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.

ஆண் குழந்தைகளை பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுமாறு அறிவுரை கூறி பெற்றோர்கள் வளர்த்தால் நாட்டில் பாலியல் தொல்லை பிரச்சனையே இருக்காது என்றும் இதை ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் கடமையாக கொள்ள வேண்டும் என்றும் அடாசர்மா தெரிவித்தார்

படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் அனைத்து துறைகளிலும் இருப்பதாகவும், சினிமாத்துறையில் மட்டும் பிரபலங்கள் இருப்பதாக இந்த துறையில் நடக்கும் தவறுகள் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கப்படுவதாகவும் அடாசர்மா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்

தற்போது பிரபுதேவா, பிரபு நடித்து வரும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் நாயகியாக நடித்து வரும் அடாசர்மா, மிக விரைவில் பெரிய நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img