சோடா பாட்டில் வீச வேண்டியது யார்..? வீசியிருக்க வேண்டியது யார்..?

sve sekhar srivilliputhur jeeyar - 2026

எங்களாலும் சோடா பாட்டில் வீச முடியும்; ஆனால் நாங்கள் அமைதி வழியை போதிக்கிறோம்… அகிம்சை வழியில் இந்தப் பிரச்னையை அணுகுவோம் என்று கூறியிருந்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், திருச்செங்கோடில் நடைபெற்ற கூட்டத்தில்!

வழக்கம் போல், பரபரப்பு, கிண்டல், அடுத்தவரை வெச்சு செய்வது என்றெல்லாம் பால பாடம் படித்து பணிக்கு வந்திருக்கும் ஊடகப் பணியாளர்கள், சோடா பாட்டில் வீச முடியும் என்ற வார்த்தையை மட்டும் கட் செய்து மீண்டும் மீண்டும் அதைக் காட்டி, ஜீயர் ஏதோ வன்முறையைத் தூண்டுவதாக பொதுமக்களிடம் ஒரு செய்தியைச் சேர்த்துள்ளன.

அதற்கு எதிர்வினையாக, சோடா பாட்டில் வீசத் தெரிந்தால் ஜீயராகி விடலாம் என்று நம் கனிமொழி அக்கா, வாய் திறந்திருக்கிறார். அவருக்காக, இதுகாறும் நட்பு முறையில் இருப்பவர் என்பதற்காக, நானும் ஒன்று சொல்லிக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்.

சோடா பாட்டில் வீச்சு கிடக்கிறது… அட அதற்காகவே நானும் தயார் செய்து கொண்டு வந்துள்ளேன். வருங்காலத்தில் உங்கள் கனவை நிறைவேற்றி வைக்கின்றேன். அதற்கு ஆண்டாள் அம்மை இந்த சந்தர்ப்பத்தை அடியேனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்றே கருதுகிறேன்.

மிகப் பெரும் போராட்டங்களை வாழ்க்கையில் சந்தித்தவர் மகான் ஸ்ரீராமானுஜர். அவரை ஆதிசேஷன் அம்சம் என அடியவர் கூட்டம் கருதுகின்றது. ஆனாலும், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து, மானுட வர்க்கத்தின் இயலாமைகளை, எதிர்கொள்ளும் விதத்தை வாழ்ந்து காட்டி போதித்துள்ளார். அந்தப் பரம்பரையில் வந்த ஒரு ஜீயர் இவ்வளவுக்கு மனம் நொந்து பேசியிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் நாமே!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

மத ரீதியான தாக்குதல்கள் தொடுக்கப் படுவதென்பது காலம் காலமாக இருந்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் கொள்கைகள் உயர்வானது. அதனைக் காப்பதற்காக உயிரையும் கொடுக்க முயன்றதுதான் வரலாற்றில் போதிக்கப் படுகிறது. இல்லை எனில் ஏன் இத்தனை போர்கள், ஏன் இத்தனை தாக்குதல்கள், கொடூரங்கள், ரத்த வெறி பிடித்த கதைகள் எல்லாம்?!

இறைவன் தானே இறங்கி வந்து போர் புரிவதில்லை; தன்னை உணர்ந்து கொண்ட ஒருவனின் தத்துவத்தைக் காப்பதற்காக அவன் வடிவிலேயே, அவன் உள்ளத்தின் உறுதி மூலமே இறைவன் தன்னைக் காட்டிக் கொள்கிறான். இறைவன் பொதுவென இருந்தாலும், இறைத் தத்துவத்தின் புரிந்துணர்வு ஏற்றத்தாழ்விலேயே பூசல்களும் பூசனைகளும் நிகழ்கின்றன.

இப்போது தாம் பின்பற்றும் தத்துவத்தைக் காப்பதற்காக, தமது தத்துவம் இழிவுபடுத்தப் படுவதைக் காணச் சகிக்காதவராக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்வாமி இவ்வளவுக்கு இறங்கி வந்து பேசியிருக்கிறார். ஆனால், தாம் பேசியது தவறு எனத் தெரிந்து, அவ்வாறு பேசுவதற்குத் தாம் யார் என்று உணர்ந்து, அதே ஆண்டாள் திருவுரு முன் அடிபணிந்து மன்னிப்புக் கோரி, தம்மை அணுகி இருக்கும் அடியார் குழாம் மனம் தம் சொல்லால் புண்பட்டிருக்கும் என்பதை உணர்ந்து தாயாரிடம் அதற்காக மன்னிப்பு கோரியிருக்கிறார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

உண்மையில், இந்த சோடா பாட்டில் வீசுவோம் கல்லெடுப்போம் என்றெல்லாம் இந்தத் தத்துவத்தைக் காப்பதற்கு முயலும் நபர்கள் சொல்லியிருந்தால், இவ்வாறு ஜீயர் போன்ற பெரியவர்கள் பேசியிருக்க வாய்ப்பில்லை. அடுத்தது, அரசுதான் இந்தப் பெருமக்களைக் காத்திருக்க வேண்டும். ஆனால் அதுவோ, தன்னைத் தான் காத்துக் கொள்வதற்கே கையாலாகாத அரசாக இருந்து கிடக்கிறது. சுற்றிலும் எதிர்ப்பாளர்கள் கூட்டமோ பல்கிப் பெருகிக் கிடக்கிறது. தனியாக பொறியில் சிக்கிக் கொண்ட நிலையில் சம்பிரதாயம் இருக்கிறது.

இந்த நிலையில் ஜீயர் ஏதோ பேசிவிட்டார். ஆனால் தவறுணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். என் செயலால் இந்து மக்கள் மனம் புண்பட்டிருக்கும் என்பதால், நான் அவர்களின் அவப்பெயர் துடைக்க மன்னிப்பு கோருகிறேன் என்று தாயார் முன் விழுந்துவிட்டார்.

இதுதான் மகான்களுக்கும், வைரமுத்து போன்ற புல்லுருவிகளுக்கும் உள்ள வேறுபாடு. அத்தனை பேர் மனம் புண்பட்டு அழுதும் கூட, மற்றவர் உணர்வுகளை மதிக்கத் தெரியாத மூடர்கூடத்தில் இருந்துகொண்டிருக்கும் வைரமுத்துவை மன்னிப்புக் கேட்டு இனி இவ்வாறு பேசவோ எழுதவோ மாட்டேன் என்று உறுதி கூற வைக்கும் வரை…

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

விடக் கூடாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories