நம்பியிருந்த நம்பி நாராயணன்: துரோகம் இழைத்த அரசியல்!

nambi narayanan isro - 2026

நம்பி நாராயணன்… அவர் படித்து முடித்த சமயத்தில்.. அமெரிக்கா போயிருந்தால்.. நம்பி நாராயணன்.. நாசாவில் தலைமைப்பொறுப்பை ஏற்றிருந்திருக்க முடியும். ஆனால்.. இஸ்ரோவில் குறைந்த சம்பளம், வீட்டுப்படி, அகவிலைப்படி.. என்று ஒரு அரசு விஞ்ஞானியாய் இருந்ததின் சாபம்.. அவரை.. கடைசிவரை மிடில் க்ளாஸில் வைத்ததுமல்லாமல்.. 50 நாள் சிறைவாசம் அனுபவிக்க வைத்ததுதான் மிச்சம். கேரள அரசின் கோரமுகம் இப்போதுவரை தெரிவதில்தான், கடவுளின் நாட்டை.. சாத்தான்கள் ஆள்கிறார்கள் என்பது தினப்படி உறுதியாகிறது.

அப்துல் கலாம் solid motor ப்ராஜக்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது.. இனி எதிர்காலம் cryogenic என்ஜின்கள் என்றும்.. 1970இல் liquid fuel மோட்டார்களை வெற்றியுடன் உருவாக்கினார். அடுத்த கட்டமாய்.. மிகப்பெரிய என்ஜின்கள் தேவைப்பட்டது. இதற்கான global tender விட்டபோது.. ரஷ்யா சுமார் 235 கோடியில் தர சம்மதித்து விட்டது. ஆனால் 935 கோடி சொன்ன அமெரிக்கா, 650 கோடி சொன்ன ப்ரான்ஸ் கடுப்பாகி.. போரிஸ் எல்ட்ஸினுக்கு ஜியார்ஜ் புஷ், கடிதம் எழுதி மிரட்டியதில்.. ரஷ்யா பின் வாங்கியது. ஆனால்.. டெக் ட்ரான்ஸ்பர் இல்லாமல்.. நான்கு க்ரையோஜனிக் என்ஜின் கட்டமைக்க.. ரஷ்யா ஒத்துக் கொண்டபோது. 1994இல் உளவு பார்த்த ஸ்காண்டல் பெரிதாகியது. இதற்கு பின் யார் என்று சொல்ல தேவையே இல்லை.

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

மாலத்தீவின்.. இரு பெண்மணிகளிடம் விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும்.. சாடிலைட்டின் ஃப்ளைட் டேட்டாவை நம்பி நாராயணன் பாகிஸ்தானுக்காக கொடுத்துவிட்டதாக்குற்றச்சாட்டு.. 50 நாள் சிறைவாசம். அடித்துத்துவைக்க.. ஆனால் உண்மையான டார்கெட் நம்பி இல்லை.. அவரோடு உள்ளேவைக்கப்பட்ட நான்கு பேருமல்ல.. நம்பியின் மேலதிகாரி முத்துநாயகம்தான் குறி. ஆனால் நம்பியோ மற்றவர்களோ.. விசாரித்த IB அதிகாரிகளிடம்.. உண்மையைத்தவிர வேறெதுவும் சொல்லவும் இல்லை.. கையெழுத்து போட்டு பொய்யாய் அவரை மாட்டிவிட முடியாது என்றதில்..இந்த கேஸ் எங்கேயும் நிற்கவில்லை.

இதை விசாரித்த சிபிஐ 1996இல் எல்லா குற்றங்களும் ஆதாரமில்லாதவை என்று தூக்கி எறிந்தது. 1998 இல் முதன்முறையாய் ஹியூமன் ரைட்ஸ் கமிஷன்.. கேரள அரசின் மீது strictures போட்டு தாக்கியது. 2001 இல் 1 கோடி இழப்பீடு தரச்சொல்லியதையும் கேரள அரசு சாய்ஸல் விட்டு அப்பீலில் பத்துலட்சம் தர ஒத்துக்கொண்டு தராமல்.. கேஸ்போட்ட போலீஸ்கார ஆசாமிகளை விடுவித்தும் விட்டது.

சாது மிரண்டது.. நம்பிக்கு டெஸ்க் ஜாப் கிடைத்தது. ஆனாலும் விடவில்லை.. கேரள அரசை துரத்தி அடிக்க ஆரம்பித்தார். இப்போது சுப்ரீம் கோர்ட் 50 லட்சம் இழப்பீடும்..பொய்கேஸ் போட்ட போலீஸ் ஆசாமிகள் மீதி நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் கமிட்டி அமைத்து வேட்டையாட முடிவெடுத்தது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

ஒரு நல்ல விஞ்ஞானியை எப்படி அரசியல் கொல்ல முடிகிறது என்பதுதான் நாம் கற்ற பாடம். இதைவிட..தாமதமான நீதி என்பது நீதி கிடைக்கவில்லை என்பதை அந்த டேல்கேட்டில் 15 நிமிடம் நின்றதை..சீன்போட்ட நீதிபதியிடம் யாராவது சொல்லித் தொலையுங்கள்.

இதுவரை வந்த எந்த அரசும் இந்த நீதித்துறையின் தினப்படிகளை சரிபண்ணவே இல்லை. கிராமம் தோறும் கோர்ட்டும்.. அதன் நடைமுறைகள் எளிமைப் படுத்தாமலும், ஒன்று அல்லது இரண்டு அப்பீல்.. மற்றும் ஒரு கேஸின் முடிவு ஒரே மாதம்தான் என்று வரையறுக்காத வரை.. இந்த துறைமீது சாமான்யனுக்கு எந்தவித மதிப்பும் வர வாய்ப்பே இல்லை. கட்ட பஞ்சாயத்துகளும் ப்ளாக்மெயில் அரசியலும்தான் வாழும்.

ச்சே.

– கட்டுரை: பிரகாஷ் ராமசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories